கோத்தகிரியில் கணிசமான இலாபத்தை அளிக்கும் பீன்ஸ் விளைச்சல் அமோகம் : துரித கதியில் அறுவடை செய்யும் விவசாயிகள்

நீலகிரி : கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகளுக்குக் கணிசமான இலாபத்தை ஈட்டித் தரும் பீன்ஸ், துரித கதியில் அறுவடை செய்யப்பட்டு வருகிறது.

நீலகிரி : கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகளுக்குக் கணிசமான இலாபத்தை ஈட்டித் தரும் பீன்ஸ், துரித கதியில் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. 



கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டபெட்டு, கூக்கல்தொரை, சுள்ளிகூடு மற்றும் நெடுகுளா உள்ளிட்ட பகுதிகளில், அதிக பரப்பளவில் பீன்ஸை பயிரிட்டு, விவசாயிகள் பராமரித்து வருகின்றனர். விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட இடுபொருட்களின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ள நிலையில், விவசாயிகள் கடன் பெற்று, பீன்ஸ் பயிரிட்டு பராமரித்து வருகின்றனர். 

தொழிலாளர் பற்றாக்குறை, கூலி உயர்வு மற்றும் வன விலங்குகளின் தொல்லை உள்ளிட்ட சவால்களை கடந்து, சாகுபடி செய்துள்ள பீன்ஸ், ஒரு மாதத்திலேயே அறுவடைக்கு தயாராகிறது. அதிகபட்சம், 5 முறை அறுவடை செய்ய முடியும் என்பதாலும், விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைக்கிறது. தற்போது, ஒரு கிலோ பீன்ஸ் 80 ரூபாய் முதல் 130 ரூபாய் வரை தரத்திற்கு ஏற்ப விலை கிடைத்து வருகிறது.

அறுவடை செய்யப்படும் பீன்ஸ், தரம் பிரித்து மேட்டுப்பாளையம் மற்றும் உள்ளூர் மண்டிகளில் விற்பனை செய்யப்படும்போது, லாரி வாடகை, ஏற்று, இறக்கு கூலி, மண்டி ஆணையம் உள்ளிட்ட செலவினங்கள் அதிகரிக்கும். இருப்பினும், தற்போது கட்டுபடியான விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இனிவரும் நாட்களில், கனமழை பெய்யும் பட்சத்தில், அறுவடைக்கு தயாரான பீன்ஸ், தோட்டத்திலே அழிந்து விடுவதற்கான வாய்ப்புள்ளதால், விவசாயிகள் துரிதகதியில் அறுவடை செய்து வருகின்றனர்.

Newsletter