தைப் பட்டம் காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பு

கோவை : தைப் பட்டம் காய்கறிகளான தக்காளி, கத்திரி மற்றும் வெண்டை உள்ளிட்டவைக்கான விலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


கோவை : தைப் பட்டம் காய்கறிகளான தக்காளி, கத்திரி மற்றும் வெண்டை உள்ளிட்டவைக்கான விலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தக்காளி

இந்தியாவின் மொத்த காய்கறி உற்பத்தியில் தக்காளி 11 சதவீதம் பங்களிக்கின்றது. தேசிய தோட்டக்கலை வாரியத்தின் மூன்றாவது முன்கூட்டிய அறிக்கையின்படி, 2017-18 ஆம் ஆண்டு இந்தியாவில் தக்காளி 7.86 இலட்சம் எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு 193.77 இலட்சம் டன்கள்

உற்பத்தியாகும் என்று அறிவித்துள்ளது. மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம், கர்நாடகா, தெலுங்கானா, ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் சேர்ந்து இந்தியாவின் மொத்த தக்காளி உற்பத்தியில் 54 சதவீதம் பங்களிக்கின்றன. இந்தியாவின் மொத்த தக்காளி உற்பத்தியில், தமிழ்நாடு 5 சதவீதத்திற்கும் குறைவாகவே பங்களிக்கின்றது.

தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் தக்காளி உற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டங்களாகும். தமிழகத்தில் அனைத்து பருவங்களிலும், தக்காளி சாகுபடி செய்யப்பட்டாலும் தைப் பட்டத்திலே அதிகளவு சாகுபடி

செய்யப்படுகின்றன. கோவை சந்தைகளுக்கு நாச்சிபாளையம், ஆலந்துறை, பூளுவாம்பட்டி மற்றும் கிணத்துக்கிடவு ஆகிய பகுதிகளிலிருந்து தக்காளி வரத்தானது அதிகளவு வருகிறது. வரும் மாதங்களில், கர்நாடகாவிலிருந்து வரும் வரத்தே தக்காளி விலையின் ஏற்ற இறக்கத்தைத் தீர்மானிக்கும்.

கத்திரி

தேசிய தோட்டக்கலை வாரியத்தின் மூன்றாவது முன்கூட்டிய அறிக்கையின்படி, 2017-18 ஆம் ஆண்டு இந்தியாவில் கத்திரி 7.36 இலட்சம் எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு 128.26 இலட்சம் டன்கள் உற்பத்தியாகும் என்று அறிவித்துள்ளது. இந்தியாவின் மொத்த உற்பத்தியில் மேற்கு வங்காளம், ஒடிசா, பீகார், குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் சேர்ந்து 69 சதவீதம் பங்களிக்கின்றன. தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருவண்ணாமலை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்கள் கத்திரி பயிரிடுவதில் பெரும்பங்கு வகிக்கின்றன. வர்த்த மூலங்களின்படி, கோவை, மதுரை, திருச்சி மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய சந்தைகளுக்கு கர்நாடகா மாநிலம் மைசூரிலிருந்து போதுமான வரத்து வந்து கொண்டிருக்கிறது.

வெண்டை

வெண்டை இந்தியாவில் பயிரிடப்படும் முக்கிய காய்கறிப் பயிர்களுள் ஒன்றாகும். 2017-18-ம் ஆண்டில் 5.14 இலட்சம் எக்டர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டு 61.26 இலட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில், மேற்கு வங்கம், குஜராத், பீகார், ஒடிசா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் சேர்ந்து 59 சதவீதம் வெண்டை உற்பத்தியில் பங்களிக்கின்றன. தமிழகத்தில் சேலம், தேனி, தருமபுரி, திருவள்ளூர், கோவை மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்கள் வெண்டை உற்பத்தியில் முன்னிலை வகிக்கின்றன. 

ஆய்வு முடிவின் அடிப்படையில் அறுவடையின்போது தரமான தக்காளியின் பண்ணை விலை ரூ. 12 முதல் ரூ. 14 வரை நல்ல தரமான கத்திரி கிலோவுக்கு ரூ. 17 முதல் ரூ.19 ஆகவும், தரமான வெண்டை பண்ணை விலை ரூ.15 முதல் ரூ.17 வரை இருக்கும். எனவே, விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிப்படையில் விதைப்பு முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்.

Newsletter