வேளாண் பல்கலை சார்பில் தயார்நிலை உணவுகள் தயாரிக்கும் சிறப்பு வகுப்பு

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் சார்பில் தயார்நிலை உணவுகள் தயாரிக்கும் சிறப்பு வகுப்பு வரும் 16-ம் தேதி நடைபெற இருக்கிறது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் சார்பில் தயார்நிலை உணவுகள் தயாரிக்கும் சிறப்பு வகுப்பு வரும் 16-ம் தேதி நடைபெற இருக்கிறது. 

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், உணவு பதப்படுத்துதல் மையம் மற்றும் பயிற்சிக் கூடம் சார்பில், கிணத்துக்கடவு, கோதவாடிப் பிரிவில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், கோவை விற்பனைக்குழுவில் வரும் 16-ம் தேதி இந்த வகுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 




கீழ்க்கண்ட தலைப்புகளில் பயிற்சி வழங்கப்படும் : 

• ஹெல்த் மிக்ஸ்

• பக்கோடா மிக்ஸ்

• அடை மிக்ஸ் 

• சூப் மிக்ஸ்

• சூப் பொடி

• புளியோதரை பேஸ்ட்

• வத்த குழம்பு பேஸ்ட்

• உலர வைத்த பொருட்கள் 

ஆர்வமுள்ளவர்கள் ரூ.750 மட்டும் பயிற்சி நாளன்று செலுத்த வேண்டும். 

மேலும், விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 

பேராசிரியர் மற்றும் தலைவர், 

அறுவடைபின் சார் தொழில் நுட்பத் துறை, 

வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், 

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை - 641003. 

தொலைப்பேசி எண் : 0422 - 6611268 , 6611340. 94425 99125

Newsletter