வேளாண் பல்கலையில் சுற்றுப்புற பயிர் வினையியல் குறித்த செயல்முறை பயிற்சி துவக்கம்

கோவையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் சுற்றுப்புற பயிர் வினையியல் குறித்த செயல்முறை பயிற்சிகள் புதனன்று முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.

பயிர்வினையியல் துறையின் மூலம் கான்கர்டு சாதனங்கள் என்ற அமைப்பின் சார்பாக மூன்று நாட்கள் நடத்தப்படும் இந்த பயிற்சியில் தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வேளாண் விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.

முன்னதாக, இதன் துவக்க நிகழ்ச்சியில் துணைப்பதிவாளர் (கல்வித்துறை) சி.என்.சந்திரசேகர் வரவேற்புரையாற்றினார்.

இயற்கை வள மேலாண்மை சிறப்பு அலுவலர் டி.ஜவஹர் பயிற்சிக்கு வருகை தந்த பயிற்சியாளர்களை பாராட்டி வாழ்த்து தெவித்தார். மேலும், மண்ணின் முக்கியத்துவம், தாவரத்தில் சூழ்நிலை மாறுபாடுகளின் முக்கியத்துவம் ஆகியன வேளாண்மையில் எவ்வாறு பங்காற்றுகிறது என எடுத்துரைத்தார். தொடர்ந்து, செயல்முறை பயிற்சிக்கு வந்த பயிற்சியாளர்களை ஆய்வு உபகரணங்களை உபயோகிக்கவும் மற்றும் அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

இதனைத்தொடர்ந்து, பயிர் மேலாண்மை இயக்குநர் சி.ஜெயந்தி செயல்முறை வகுப்புகளை பராட்டியும், பயிர்வினையியலின் முக்கயித்துவமானது தாவரத்தின் மகசூல் மற்றும் தாவரத்தின் தரத்தினை மேம்படுத்துகிறது என சிறப்புரை ஆற்றினார்.

ஆராய்ச்சி இயக்குநர் எம்.மகேஷ்வரன் விழாவிற்கு தலைமை தாங்கியும், சிறப்புரை ஆற்றியும் விழாவினை செம்மைப்படுத்தினார்.

நிறைவாக உதவி பேராசிரியர் பி.பூமிநாதன் நன்றியுரை வழங்கினார்.

Newsletter