இஸ்ரேல் நாட்டுடன் இணைந்து பல துறைகளை மேம்படுத்த ஆய்வு- தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர்.!!

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் இஸ்ரேல் நாட்டுடன் இணைந்து பல்வேறு துறைகளை மேம்படுத்த ஆய்வு மேற்கொண்டதாகவும், இதற்காகத் தென்னிந்திய இஸ்ரேல் ஆலோசகர் ஜோனாதன் சாட்கா ஆகியோருடன் கலந்தாலோசனை செய்ததாகவும் நீ.குமார் தெரிவித்தார்.



கோவை: இஸ்ரேல் நாட்டுடன் இணைந்து பல துறைகளை மேம்படுத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் நீ.குமார் தெரிவித்துள்ளார்.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நீ.குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.



அப்போது பேசிய அவர், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் இஸ்ரேல் நாட்டுடன் இணைந்து பல்வேறு துறைகளை மேம்படுத்த ஆய்வு மேற் கொண்டதாகவும் இதற்காகத் தென்னிந்திய இஸ்ரேல் ஆலோசகர் ஜோனாதன் சாட்கா ஆகியோருடன் கலந்தாலோசனை செய்ததாகவும் தெரிவித்தார்.

விவசாயத் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்த அவர் குறிப்பாக நேனோ டெக்னாலஜி, சுற்றுச்சூழல் குறித்த ஆய்வு, ரிமோட் சென்சார்(ட்ரோன்) டெக்னாலஜி, நீர்வள தொழில்நுட்பம் குறித்துக் கலந்துரையாடியதாக தெரிவித்தார்.

20-ஆண்டுகளாக இந்தியா அவர்களது தொழில் நுட்பத்தைப் பின்பற்றி வரும் நிலையில் தற்பொழுது அட்வான்ஸ் டெக்னாலஜி யை கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

கழிவு நீரைச் சுத்திகரித்து மீண்டும் அதனை விவசாயம் அல்லது வீடுகளுக்குப் பயன் படுத்தும் முயற்சியில் ஒரு மாதிரி செய்யப்பட உள்ளதாகவும், இது ஏற்கனவே இஸ்ரேல் நிறுவனத்தினர் ஊட்டி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் செய்து இருப்பதாகவும் அதனை ஆய்வு மேற்கொண்டு அதனை விரிவுபடுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

ட்ரோன் டெக்னாலஜியில் தற்பொழுது நாம் ஆட்களைப் பயன்படுத்தி சென்சார் மூலம் அதனைப் பயன்படுத்தி வரும் நிலையில், ஆட்கள் இல்லாமல் பயன்படுத்தும் டெக்னாலஜி பற்றியும் அவர்கள் தெரிவித்து இருப்பதாகக் கூறினார். இந்திய அளவில் நேனோ டெக்னாலஜி மற்றும் விவசாயத்தில் நமது பல்கலைக்கழகம் சிறந்து செயல்படுவதாகவும் கூறினார்.

மேலும் இங்குள்ள ஆசிரியர்களுக்கு இந்த புதிய டெக்னாலஜி குறித்து கற்றுத்தர அவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும், இங்கு பி.எச்.டி படிக்கும் மாணவர்கள் இஸ்ரேல் சென்று பிஎச்டி செய்ய வாய்ப்பு கிட்டும் என்றும் தெரிவித்தார்.

இதன் மூலம் இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் உறவு வலுப்படும் என்று கூறிய அவர், நமது பிரதமரும் அந்நாட்டுப் பலரும் கூட ஒப்பந்தம் மேற்கொண்டது விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என ஒப்பந்தம் மேற்கொண்டதாகவும் சுட்டிக்காட்டினார்.



இந்த செய்தியாளர் சந்திப்பில், தமிழ்நாடு பல்கலைக் கழக துணைவேந்தர் நீ.குமார், துணிந்த இஸ்ரேல் ஆலோசகர் ஜோனாதன் சாட்கோ மற்றும் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...