லட்சுமி விலாஸ் வங்கியின் சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடனுதவி கண்காட்சி

கோவை, அவிநாசி சாலையில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில் லட்சுமி விலாஸ் வங்கியின் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடனுதவி கண்காட்சி ஜனவரி 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் நடக்கிறது. இக்கண்காட்சியானது, அனைத்து வகையிலும் தொழில்துறையினருக்கு உதவும் வகையில் மேபடுத்தப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. சிறு, நடுத்தர தொழில் நிறுவனத்தினரின் முன்னேற்றம், தொழில்சார்ந்த விவாதங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.



இது குறித்து, லட்சுமி விலாஸ் வங்கியின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் பார்த்தசாரதி முகர்ஜி பேசுகையில்; இந்திய பொருளாதரத்தில் சிறு, நடுத்தர பொருளாதரத்தில், சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன என்பதை புரிந்து கொண்டுள்ளோம். இந்த நிறுவனங்கள், வாடிக்கையாளர்களை கவருவதிலும், நிலையான லாபத்தை ஈடுபடுவதிலும், வருவாயை அதிகரிப்பதிலும் பல்வேறு சவால்களை சந்தித்து வருகின்றன. இக்கண்காட்சியால் புதிய சந்தை வாய்ப்புகள் கிடைக்கும். வங்கிக்கும், பொதுமக்களுக்கும் என இருதரபினருக்கும் பயனுள்ளதாக அமையும். இன்னும் பல்வேறு இடங்களில் இது போன்ற கண்காட்சியை நடத்த வங்கி திட்டமிட்டுள்ளது. இந்த வாய்ப்புகளை சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.    



மேலும், வாடிக்கையாளர்களின் அரங்குகளுடன், வங்கியின் பிற சேவைகளான ஆயுள் காப்பீடு, பொது காப்பீடு, உடல் நலத்துக்கான மருத்துவ காப்பீடு மற்றும் வங்கியின் சேவைகள் போன்றவைகளும் இடம் பெற்றுள்ளன. சில தொழில் நிறுவனகளுக்கு மட்டுமின்றி, பிற வகையிலும் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் வந்து மகிழ்வோடு கண்காட்சியை கண்டு களிக்க, பொழுதுபோக்கு நிகழ்சிகளுடன் அறுசுவை உணவுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...