கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்புடைய 7.61 ஏக்கர் நிலத்தை, இந்து சமய அறநிலையத்துறையினர் மீட்டுள்ளனர்.
கோவை: கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்புடைய 7.61 ஏக்கர் நிலத்தை, இந்து சமய அறநிலையத்துறையினர் மீட்டுள்ளனர்.
கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் முத்துவேலப்பன் மற்றும் சாமிநாதன்.

இவர்கள், அருள்மிகு மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான 7.61 ஏக்கர் நிலத்தை, ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வந்தனர்.

இது குறித்து எழுந்த புகார் அடிப்படையில், இந்து சமய அறநிலையத்துறை கோவை உதவி ஆணையாளர் ஆர்.விஜயலட்சுமி தலைமையில், துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், மதுக்கரை போலீஸார் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, அவர்கள் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, 7.61 ஏக்கர் நிலத்தை மீட்ட அதிகாரிகள், பொதுமக்கள் முன்னிலையில் அதனை திருக்கோவில் செயல் அலுவலர் சரண்யா வசம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, அந்த நிலத்தில் கோவிலுக்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டது.
கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் முத்துவேலப்பன் மற்றும் சாமிநாதன்.
இவர்கள், அருள்மிகு மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான 7.61 ஏக்கர் நிலத்தை, ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வந்தனர்.
இது குறித்து எழுந்த புகார் அடிப்படையில், இந்து சமய அறநிலையத்துறை கோவை உதவி ஆணையாளர் ஆர்.விஜயலட்சுமி தலைமையில், துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், மதுக்கரை போலீஸார் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அவர்கள் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, 7.61 ஏக்கர் நிலத்தை மீட்ட அதிகாரிகள், பொதுமக்கள் முன்னிலையில் அதனை திருக்கோவில் செயல் அலுவலர் சரண்யா வசம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, அந்த நிலத்தில் கோவிலுக்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டது.