பீட்டாவிற்கு ஆதரவாக பேசிய சினிமா நடிகர்களை எதிர்த்து பேசிய நடிகர் ரஞ்சித்


கோவை வ.உ.சி மைதானத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நடிகர் ரஞ்சித் ஆதரவு தெரிவித்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஞ்சித்; தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பிட்டாவை தடை செய்யக்கோரியும் கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் ஜாதி, மதம் இல்லாமல் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இனைந்து தமிழகம் முழுவதும் முதல்முறையாக வன்முறை இல்லாத போராட்டமாக நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் உலக நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

தமிழ்நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் இருந்தும் அரசியல் கட்சிகள் இல்லாமல் நடைபெறும் இந்த போராட்டத்திற்கு நல்ல தீர்வு கிடைக்கும். மத்திய, மாநில அரசு இந்த பிரச்சனையை அரசியாலக்கப்பட்டும் தமிழர்களின் உணர்வையும்,  உரிமையும் விளையாடுகிறது. ஆனால், இந்த போராட்டம் மாணவர்களால் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இனி எந்த ஒரு அரசியல் கட்சியும் தமிழர்களின் உரிமையை தகர்க்க முடியாது.

அதேபோல், பீட்டா அமைப்புக்கு ஆதரவாக பேசும் நடிகர்கள் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு இங்கு அவர்கள் பிழைத்தும் அவர்களுக்கு தேவையான அனைத்தையும் எடுத்துக் கொண்டும்,  பீட்டாவிற்கு உறுதுணையாக இருந்து கொண்டு டிவிட்டர் மற்றும் சமூக இணைய தளங்கள் மூலமாக பீட்டாவிற்கு ஆதரவு தெரிவிப்பது ஒரு கேவலமான ஒரு செயலாக உள்ளது. தமிழ்நாட்டு மக்களின் கோபங்களுக்கு விரைவில் அவர்கள் ஆளாகக் கூடுவார்கள் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

தொண்டாமுத்தூர்: திமுக வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – செந்தில் பாலாஜி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிர்வ...

வால்பாறை: திமுக வேட்பாளருக்கு ஆதரவு கோரி டாக்டர் மகேந்திரன் பரப்புரை..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் குட்டி என்கிற ஆ. சுதாகருக்கு ஆதரவு கோரி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தேர்தல்...