ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வால்பாறை கல்லூரி மாணவர்கள்

வால்பாறையில் பாரதியார் பல்கலைக் கழகத்தால் செயல்பட்டுவரும் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டம் குறித்து கவனம் செலுத்தாமல் உள்ள மத்திய, மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் கல்லூரி வளாகத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 





இதில் "தடை செய் தடை செய் பீட்டா அமைப்பை தடை செய்", "அனுமதி கொடு அனுமதி கொடு ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி கொடு" போன்ற முழக்கங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் கூறுகையில், தமிழர்களின் பண்பாட்டை சீர்குலைக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் ஜல்லிக்கட்டை தடை செய்துள்ளது. இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. 

உடனடியாக மத்திய, மாநில அரசுகள் அவசர சட்டம் இயற்றி பீட்டா அமைப்பை தடை செய்வதோடு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியும் வழங்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். 

இது குறித்து மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி வழங்கும் வரை போராட்டங்கள் தொடரும் என்றும் அவர்கள் கூறினர்.

Newsletter

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...