ஜல்லிக்கட்டு வேண்டி கோவையில் ஐ.டி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை பீளமேடு பகுதியில் 'டைடில் பார்க்' என்னும் தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் செயல்பட்டுவருகிறது. 



இந்நிலையில், கோவையில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்நிறுவனத்தில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தின் போது, ஐடி ஊழியர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்புக்கு எதிராகவும் வாசகங்கள் எழுதிய பதாகைகளை கையில் ஏந்திக்கொண்டு ஊர்வலமாக சென்றனர். மேலும், ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். 



இந்த ஊர்வலம் டைடில் பார்க் வளாகத்தில் தொடங்கி கோவை மருத்துவக் கல்லூரி வழியாக அவிநாசி சாலையை அடைந்து, ஹோப்ஸ் சிக்னல் வழியாக மீண்டும் டைடில் பார்க் வந்தடைந்தது. இதனால் அவிநாசி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...