ஜல்லிக்கட்டு வேண்டி கோவையில் ஐ.டி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை பீளமேடு பகுதியில் 'டைடில் பார்க்' என்னும் தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் செயல்பட்டுவருகிறது. 



இந்நிலையில், கோவையில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்நிறுவனத்தில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தின் போது, ஐடி ஊழியர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்புக்கு எதிராகவும் வாசகங்கள் எழுதிய பதாகைகளை கையில் ஏந்திக்கொண்டு ஊர்வலமாக சென்றனர். மேலும், ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். 



இந்த ஊர்வலம் டைடில் பார்க் வளாகத்தில் தொடங்கி கோவை மருத்துவக் கல்லூரி வழியாக அவிநாசி சாலையை அடைந்து, ஹோப்ஸ் சிக்னல் வழியாக மீண்டும் டைடில் பார்க் வந்தடைந்தது. இதனால் அவிநாசி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...