இந்தியாவில் தயாரிக்கபட்ட இலகு ரக விமானம் சூலூர் விமான படை தளத்தில் இணைக்கபடும் என விமான படை அதிகாரி தகவல்


இந்தியாவில் தயாரிக்கபட்ட தேஜாஸ் இலகு ரக விமானம் 2018-ல் சூலூர் விமான படை தளத்தில் இணைக்கப்படும்  என விமான படை அதிகாரி சுனில்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.



குடியரசு தினத்தின் ஒரு பகுதியாக சூலூர் படை தளத்தில் விமான படை செயல்பாடுகள் குறித்த கண்காட்சி மற்றும் செயல் விளக்கம் இன்று நடைபெற்றது.

தற்போது விமான சேவையில் உள்ள இந்தியாவில் 2003-ல் தயாரிக்கபட்ட நவீன இலகு ரக எம்.கே-1 ஹெலிகாப்டர், இங்கலாந்தில் 1964ல் தயாரிக்கபட்ட ஆரோ-748 விமானம், மணிக்கு 540 கி.மீட்டர் வேகத்தில் பொருட்களை ஏற்றி செல்லுதல், பயிற்சி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பயணத்திற்கு உபயோகிக்கப்படும்  ஆண்டநோவ்-32 விமானம் மற்றும் ரஷ்யாவில் உருவாக்கபட்ட எம்.ஐ-17வி-5 ஆகியன கண்காட்சியில் இடம் பெற்றன.

மேலும், போர் மற்றும் கலவர காலங்களில் வீரர்கள் உபயோகிக்கும் ராப்ளிங் கயிறு, விளக்குகள், பாதுகாப்பு கவசங்கள் மற்றும் கூடாரங்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.





இக்கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக தீவிரவாத தாக்குதலின் போது விமான படை வீரர்கள் எவ்வாறு செயல்படுகின்றனர் என்பது குறித்த ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் இறங்கி தாக்குதல் நடத்தும் செயல் விளக்கம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இதுகுறித்து சூலூர் விமான படை தள அதிகாரி ஏர் கமோடர் சுனில்குமார் கூறும்போது, சுதந்திர தின விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இந்திய விமான படை செயல்பாடுகள் பற்றி தெரிந்து கொள்ளும் நோக்கிலும் இந்த கண்காட்சி நடத்தப்படுவதாக கூறினார்.

மேலும், இந்த கண்காட்சியில் 7000-கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கபடுவதாக கூறியவர் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் இலகு ரக விமானம் 2018-ல் சூலூர் விமான படை தளத்தில் இணைக்கபடும் என்றும் தெரிவித்தார்.

Newsletter

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...