கிருஷ்ணா கல்வி நிறுவனங்களில் பாரம்பரிய விளையாட்டுகளுடன் பொங்கல் திருவிழா


கோவை கிருஷ்ணா கல்வி நிறுவனங்களில் பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிகளை கல்வி குழுமங்களின் முதன்மை நிர்வாக அலுவலர் சுந்தரராமன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில் பாரம்பரிய விளையாட்டுகள், போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பழங்கால விளையாட்டுகள் மற்றும் போட்டிகளில் இக்கல்விக் குழுமங்களின் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். கயிறு இழுத்தல், உறி அடித்தல் மற்றும் கண்ணாமூச்சி போட்டிகள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. 



இப்போட்டிகள் பழைய கலாச்சாரத்தினை, பழக்க வழக்கங்கள் மற்றும் முறைகளை எப்பொழுதும் பின்பற்ற வேண்டும் என்பதை உணர்த்தியது. கலாச்சாரத்தினை, நமது பாராம்பரிய விளையாட்டுக்கள், போட்டிகளை குறிப்பாக இன்றைய இளைஞர்கள் மறக்கக் கூடாது என்பதை இந்நிகழ்ச்சி எடுத்துரைத்தது. 



மேலும் கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உணவக மற்றும் விடுதி மேலாண்மைத்துறை பராம்பரிய உணவு வகைகளை அனைத்து அலுவலர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் மதிய உணவாக பரிமாறினர். மேலும் இக்கல்லூரியின் முதுநிலை சமூகப்பணித்துறை சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள நகலூர் மலைவாழ் கிராமத்தில் பொங்கல் நிகழ்ச்சிகளை நடத்தினர். 



இதில் இக்கல்லூரிகளின் முதல்வர்கள் ஜேனட், இரமேஷ், பாபாஞானகுமார், ராதிகா, மேலாண்மைத் துறை இயக்குநர் இராமகிருஷ்ணன், பேராசிரியர்கள் மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...