தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டிகள் கோவையில் இன்று துவக்கம்


கோவையில் தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 700 வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

கோவையில் தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டிகள் இந்திய வலுதூக்கும் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் போட்டியானது கோவை சித்ரா பகுதியிலுள்ள தனியார் அரங்கில் இன்று துவங்கி வரும் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் நாடுமுழுவதும் 28 மாநிலங்களை சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் 18 முதல் 23 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் 350 ஆண்கள் மற்றும் 150 பெண்களும், 40 முதல் 70 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் மொத்தம் 200 வீரர் மற்றும் வீராங்கனைகள் என 700 பேர் இந்த போட்டிகளில் பங்குபெற உள்ளனர். இதன் முதல் நாளான இன்று 53 கிலோ மற்றும் 59 கிலோ எடைப் பிரிவினருக்கான போட்டிகள் நடத்தப்பட்டன. இதனை தொடர்ந்து 66 கிலோ மற்றும் 120 கிலோ எடைப்பிரிவு என 9 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற உள்ளது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...