' பொங்கல் பண்டிகையன்று தமிழர்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்ற வேண்டும்' இயக்குனர் தங்கர்பச்சன்


வறட்சியால் உயிரிழந்த விவசாயிகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக பொங்கல் பண்டிகையன்று  தமிழர்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்ற வேண்டும் என திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சன் கோவையில் ந்டந்த பொங்கல் விழாவில் உருக்கமாக பேசினார்.

கோவை ஓருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் வழகறிஞர் சங்கத்தின் சார்பில்  இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.இதன்  ஓரு பகுதியாக நீதிமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சன் கலந்து கொண்டு பேசினார்.தற்போது மக்கள் நல்ல உணவு கிடைக்காமல் நஞ்சு கலந்த உணவையே உன்னுவதாகவும் இதற்கு காரணம் விவசாய நிலங்கள் அழிக்கபட்டு மனைகளாக உருவாகி வருவதால் விவசாயம் அழிந்து வருவதாக பேசியவர் தற்பொழுது 60 சதவீதம் கழிப்பிட வசதிகள் இல்லாத நிலை உள்ளதாகவும் ஏவுகனை தயாரிப்பு மற்றும் நாட்டின் பாதுகாப்பு என செலவு செய்து வரும் அரசு விவசாயதிற்கு 3.5 சதவீதம் மட்டுமே நிதி ஒதுக்குவதாகவும் அரசு வழங்கும் இலவச பொருட்களை வாங்க கையேந்தும் நிற்பது தான் தமிழனின் நிலை என்றார்.விவசாயிகளை காப்பாற்ற மத்திய அரடு திட்டம் போட்டு பணம் ஒதுக்குகிறது.ஆனால் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் திட்டங்களை செயல் படுத்துவதில்லை என்றார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், விவசாயிகளின் மரணத்தில் அக்கறையில்லாமல் பொழுது போக்கில் நாட்டம் கொண்டு தமிழர்கள் இருந்து வருகின்றோம் என தெரிவித்தார்.மேலும் வறட்சியால் 17  விவசாயிகள்  மட்டுமே உயிரிழந்ததாக தமிழக அரசு சொல்லுவது தவறானது எனவும் தெரிவித்தார். உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பின் படி காவிரி நதி நீர் ஆணையம் அமைக்க மத்திய அரசை அனைத்து கட்சிகளும் ஓருங்கிணைந்து வலியுறுத்தவில்லை எனவும்  விவசாயிகளுக்கு பாதிப்பு வந்தால் பொதுமக்கள் அழிந்து போவார்கள் என தெரிவித்த தங்கர்பச்சன், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் வறட்சியால் இறந்தவர்களின் உண்மையான கணக்கினை  வெளியிட வேண்டும் எனவும் அப்போதுதான் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்ய முடியும் எனவும் முழு நிவாரணம் விவசாயிகளுக்கு கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
விவசாயிகளின்  உயிரிழப்புகளை மறைப்பதால்  தமிழர்களுகும் தமிழகத்திற்கும்தான் பெரிய இழப்பு எனவும் தெரிவித்த அவர், வறட்சியால் உயிரிழந்த விவசாயிகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக பொங்கல் பண்டிகையன்று  தமிழர்கள் ஓவ்வொருவரும் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.இப்போதைய சூழலில்  விவசாயிகளின் உயிரை பாதுகாப்பது முக்கியமானது எனவும், ஜல்லிகட்டும் அவசியம்தான் எனவும் தங்கர்பச்சன்  தெரிவித்தார்.

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...