சி.ஆர்.ஐ பம்ப்ஸ் நிறுவனம் சார்பில் அரசு மேல்நிலைப் பள்ளியில் "மாணவர் நல விழா"

ஒரு பள்ளிக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும், கல்வித் தரத்தையும் உயர்த்தி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இடையேயுள்ள இடைவெளியை குறைத்து, அரசுப் பள்ளிகளை மாதிரிப் பள்ளிகளாய் உருவாக்குவதே சி.ஆர்.ஐ பம்ப்ஸ் பள்ளி வளர்ச்சி திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இத்தகைய உயரிய குறிக்கோளுடன் சி.ஆர்.ஐ பம்ப்ஸ் நிறுவனம் 9 கிராம அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து பள்ளிகளின் அடிப்படை தேவைகளை, பள்ளி வளர்ச்சி திட்டத்தின் கீழ் நிறைவேற்றி வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக கடந்த ஜனவரி 6ம் தேதியன்று கோவை அரசு மேல்நிலைப்பள்ளி சர்கார் சாமக்குளத்தில் "மாணவர் நல விழா" சிறப்பாக நடைபெற்றது.



பள்ளியின் தலைமை ஆசிரியை ரெ.சுப்புலட்சுமி வரவேற்புரையாற்றி நிகழ்ச்சியனை துவக்கி வைத்தார்.  இதைத்தொடர்ந்து, ஆசிரியை வே.தமிழரசி ஆண்டறிக்கையை வாசித்தார். 

இதைத்தொடர்ந்து, சி.ஆர்.ஐ பம்ப்ஸ் நிறுவன பொது மேலாளர் பி.ரவிச்சந்திரன் பேசுகையில், மாணவர்கள் ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்கும் பாடங்களை உன்னிப்பாக கவனித்து கற்றுக்கொண்டு தேர்வுகளில் அதிகமான மதிப்பெண்களை பெற வேண்டும். 

அறிவின் தேடல் வாழ்நாள் இறுதிவரை இருக்க வேண்டும். எதிர்கால திட்டங்களை தீர்மானித்து இன்றிலிருந்தே அந்த குறிக்கோளை நோக்கி செல்ல முற்படுங்கள். திறமைகளை வளர்த்துக் கொண்டு சமூகத்தில் சிறந்த மனிதர்களாக வளம் வர வேண்டும்" என்றார்.

தொடர்ந்து, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கும் பரிசுகளை வழங்கி அவர் சிறப்பித்தார்.

பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கே.பழனிசாமி பேசுகையில், சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனம் கோவில்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பல்வேறு நலத்திட்ட வசதிகளையும், உதவிகளையும் செய்து வருகிறது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக இது உள்ளது. மேலும் நலத்திட்ட உதவிகள் தொடர வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனம், சமூக பொறுப்புணர்வு மேலாளர் எஸ்.ராஜா பேசுகையில், சி.ஆர்.ஐ பம்ப்ஸ் நிறுவனம் மக்களுக்கும் சமூகத்திற்கும் செய்து வரும் நலத்திட்ட உதவிகள் மற்றும் எதிர்கால திட்டங்களையும், மாணவர்கள் பல வெற்றிகளை குவித்து வாழ்வில் வெற்றியடையுமாறும் வாழ்த்துரை வழங்கினார்.

இதைத்தொர்ந்து, பள்ளி மாணவர்களின் பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், சுமார் 2000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...