சி.ஆர்.ஐ பம்ப்ஸ் நிறுவனம் சார்பில் அரசு மேல்நிலைப் பள்ளியில் "மாணவர் நல விழா"

ஒரு பள்ளிக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும், கல்வித் தரத்தையும் உயர்த்தி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இடையேயுள்ள இடைவெளியை குறைத்து, அரசுப் பள்ளிகளை மாதிரிப் பள்ளிகளாய் உருவாக்குவதே சி.ஆர்.ஐ பம்ப்ஸ் பள்ளி வளர்ச்சி திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இத்தகைய உயரிய குறிக்கோளுடன் சி.ஆர்.ஐ பம்ப்ஸ் நிறுவனம் 9 கிராம அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து பள்ளிகளின் அடிப்படை தேவைகளை, பள்ளி வளர்ச்சி திட்டத்தின் கீழ் நிறைவேற்றி வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக கடந்த ஜனவரி 6ம் தேதியன்று கோவை அரசு மேல்நிலைப்பள்ளி சர்கார் சாமக்குளத்தில் "மாணவர் நல விழா" சிறப்பாக நடைபெற்றது.



பள்ளியின் தலைமை ஆசிரியை ரெ.சுப்புலட்சுமி வரவேற்புரையாற்றி நிகழ்ச்சியனை துவக்கி வைத்தார்.  இதைத்தொடர்ந்து, ஆசிரியை வே.தமிழரசி ஆண்டறிக்கையை வாசித்தார். 

இதைத்தொடர்ந்து, சி.ஆர்.ஐ பம்ப்ஸ் நிறுவன பொது மேலாளர் பி.ரவிச்சந்திரன் பேசுகையில், மாணவர்கள் ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்கும் பாடங்களை உன்னிப்பாக கவனித்து கற்றுக்கொண்டு தேர்வுகளில் அதிகமான மதிப்பெண்களை பெற வேண்டும். 

அறிவின் தேடல் வாழ்நாள் இறுதிவரை இருக்க வேண்டும். எதிர்கால திட்டங்களை தீர்மானித்து இன்றிலிருந்தே அந்த குறிக்கோளை நோக்கி செல்ல முற்படுங்கள். திறமைகளை வளர்த்துக் கொண்டு சமூகத்தில் சிறந்த மனிதர்களாக வளம் வர வேண்டும்" என்றார்.

தொடர்ந்து, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கும் பரிசுகளை வழங்கி அவர் சிறப்பித்தார்.

பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கே.பழனிசாமி பேசுகையில், சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனம் கோவில்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பல்வேறு நலத்திட்ட வசதிகளையும், உதவிகளையும் செய்து வருகிறது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக இது உள்ளது. மேலும் நலத்திட்ட உதவிகள் தொடர வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனம், சமூக பொறுப்புணர்வு மேலாளர் எஸ்.ராஜா பேசுகையில், சி.ஆர்.ஐ பம்ப்ஸ் நிறுவனம் மக்களுக்கும் சமூகத்திற்கும் செய்து வரும் நலத்திட்ட உதவிகள் மற்றும் எதிர்கால திட்டங்களையும், மாணவர்கள் பல வெற்றிகளை குவித்து வாழ்வில் வெற்றியடையுமாறும் வாழ்த்துரை வழங்கினார்.

இதைத்தொர்ந்து, பள்ளி மாணவர்களின் பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், சுமார் 2000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...