மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றுவேன் என உறுதி கூறுவதாக கோவை மாநகராட்சியின் மேயர் பேட்டி..!

அடிமட்ட உறுப்பினராக இருந்த என்னை உயர்ந்த பதவியில் உட்கார வைத்து அழகுபார்த்த முதலமைச்சரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருப்பேன் எனவும் கூறினார்.



கோவை: மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றுவேன் என உறுதி கூறுவதாக கோவை மாநகராட்சியின் மேயர் பேட்டி அளித்துள்ளார்.

கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் மற்றும் திமுகவின் முதல் மேயர் என்ற இரட்டை பெருமையை கல்பனா ஆனந்தகுமார் பெற்றுள்ளார்.

கோவை மாநகராட்சியின் புதிய மேயராக திமுக வேட்பாளர் கல்பனா ஆனந்தகுமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேயர் தேர்தல் முடிவடைந்ததை அடுத்து மின்சாரதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி வருகை தந்து சிறப்பு செய்தார்.

மேயர் உடை அணிந்து வந்த கல்பனா ஆனந்தகுமார் மாநகராட்சி ஆணையர் ராஜகோபல் சுங்காரவிடம் இருந்து செங்கோல் பெற்றுக்கொண்டார்.



அதனை தொடர்ந்து மேயராக தேர்வு செய்யப்பட்ட கல்பனா ஆனந்தகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-



மேயராக என்னை தேர்வு செய்த முதல்வருக்கு நன்றி. இந்த அரிய வாய்ப்பை வழங்கிய உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றி. பொதுமக்களை நேரடியாக சந்தித்து கோரிக்கைகளை கேட்பேன்.

பொதுமக்கள் எப்பொழுது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம். மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றுவேன் என உறுதி கூறுகிறேன்.



அடிமட்ட உறுப்பினராக இருந்த என்னை உயர்ந்த பதவியில் உட்கார வைத்து அழகுபார்த்த முதல்வரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருப்பேன் எனவும், கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளில் தடையின்றி குடிநீர் கிடைக்கவும், தெருவிளக்கு சாலை வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

பள்ளிகளை மேம்படுத்துதல், அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துதல் போன்ற பணிகளில் கவனம் செலுத்துவேன் எனவும் கோவை மேயர் கல்பனா தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, 26வது வார்டு மாநகராட்சி பள்ளியில் கழிப்பிடம் கட்டுவதற்கு 16 லட்சம் மதிப்பீட்டில் கொடுக்கப்பட்ட திட்டத்தில் கையெழுத்திட்டார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...