மேலும், கோவை மாநகராட்சியின் முதல் திமுக மேயர் என்ற பெருமையையும், இவர் பெற்றுள்ளார்.
கோவை: கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக கல்பனா ஆனந்தகுமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாநகராட்சியின் முதல் திமுக மேயர் என்ற பெருமையையும், 19வது வார்டில் வெற்றி பெற்ற கல்பனா ஆனந்தகுமார் பெற்றுள்ளார்.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 100 வார்டுகளில் 96 வார்டுகளை திமுக கூட்டணி பிடித்தது.
கடந்த 2 ஆம் தேதி மாமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்.
இந்த நிலையில், நேற்று திமுக தலைமை மேயர் வேட்பாளரை அறிவித்தது. வார்டு 19 யில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கல்பனா ஆனந்தகுமார் மேயர் வேட்பாளராகவும், 92வது வார்டில் வெற்றி பெற்ற வெற்றி செல்வன் துணை மேயராக அறிவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், இன்று காலை கோவை மாநகராட்சி விக்டோரியா அரங்கில் நடைபெற்ற மறைமுக தேர்தலில், கல்பனா ஆனந்தகுமார் ஒரு மனதாக மேயராக தேர்வு செய்யப்பட்டார்.

அவருக்கு, மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்காரா வெற்றி சான்றிதளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இதுவரை கோவை மாநகராட்சியில் கூட்டணி கட்சியினர் மட்டுமே மேயர் ஆக பதவி வகித்த நிலையில், முதல் முறையாக முழு அதிகாரத்துடன் மேயர் பதவியை திமுக பெறுகிறது.


கோவை மாநகராட்சியின் முதல் திமுக மேயர் என்ற பெருமையையும், 19வது வார்டில் வெற்றி பெற்ற கல்பனா ஆனந்தகுமார் பெற்றுள்ளார்.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 100 வார்டுகளில் 96 வார்டுகளை திமுக கூட்டணி பிடித்தது.
கடந்த 2 ஆம் தேதி மாமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்.
இந்த நிலையில், நேற்று திமுக தலைமை மேயர் வேட்பாளரை அறிவித்தது. வார்டு 19 யில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கல்பனா ஆனந்தகுமார் மேயர் வேட்பாளராகவும், 92வது வார்டில் வெற்றி பெற்ற வெற்றி செல்வன் துணை மேயராக அறிவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், இன்று காலை கோவை மாநகராட்சி விக்டோரியா அரங்கில் நடைபெற்ற மறைமுக தேர்தலில், கல்பனா ஆனந்தகுமார் ஒரு மனதாக மேயராக தேர்வு செய்யப்பட்டார்.
அவருக்கு, மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்காரா வெற்றி சான்றிதளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இதுவரை கோவை மாநகராட்சியில் கூட்டணி கட்சியினர் மட்டுமே மேயர் ஆக பதவி வகித்த நிலையில், முதல் முறையாக முழு அதிகாரத்துடன் மேயர் பதவியை திமுக பெறுகிறது.