கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக கல்பனா ஆனந்தகுமார் போட்டியின்றி தேர்வு..!

மேலும், கோவை மாநகராட்சியின் முதல் திமுக மேயர் என்ற பெருமையையும், இவர் பெற்றுள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக கல்பனா ஆனந்தகுமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.



கோவை மாநகராட்சியின் முதல் திமுக மேயர் என்ற பெருமையையும், 19வது வார்டில் வெற்றி பெற்ற கல்பனா ஆனந்தகுமார் பெற்றுள்ளார்.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 100 வார்டுகளில் 96 வார்டுகளை திமுக கூட்டணி பிடித்தது.

கடந்த 2 ஆம் தேதி மாமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்.

இந்த நிலையில், நேற்று திமுக தலைமை மேயர் வேட்பாளரை அறிவித்தது. வார்டு 19 யில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கல்பனா ஆனந்தகுமார் மேயர் வேட்பாளராகவும், 92வது வார்டில் வெற்றி பெற்ற வெற்றி செல்வன் துணை மேயராக அறிவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இன்று காலை கோவை மாநகராட்சி விக்டோரியா அரங்கில் நடைபெற்ற மறைமுக தேர்தலில், கல்பனா ஆனந்தகுமார் ஒரு மனதாக மேயராக தேர்வு செய்யப்பட்டார்.



அவருக்கு, மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்காரா வெற்றி சான்றிதளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இதுவரை கோவை மாநகராட்சியில் கூட்டணி கட்சியினர் மட்டுமே மேயர் ஆக பதவி வகித்த நிலையில், முதல் முறையாக முழு அதிகாரத்துடன் மேயர் பதவியை திமுக பெறுகிறது.



Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...