அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சொந்த வார்டான 92-வது வார்டில் அதிமுக வேட்பாளரைத் தோற்கடித்து, வெற்றி செல்வன் முதல் முறையாக மாமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் துணை மேயர் வேட்பாளராக வெற்றி செல்வன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
கோவை: கோவை துணை மேயர் வேட்பாளராக வெற்றி செல்வன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
கோவை பி.கே.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் இரா.வெற்றி செல்வன். 51-வயதான இவர் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். இவர் திமுகவில் கோவை மாநகராட்சி 92-வது வட்ட செயலாளராகப் பதவி வகித்து வருகிறார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சொந்த வார்டான 92-வது வார்டில் அதிமுக வேட்பாளரைத் தோற்கடித்து, வெற்றி செல்வன் முதல் முறையாக மாமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் துணை மேயர் வேட்பாளராக வெற்றி செல்வன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்துப் பேசிய வெற்றி செல்வன், “எனக்கு வாக்களித்த மக்களுக்கும், வாய்ப்பு வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் மாவட்டச் செயலாளர்களுக்கும் நன்றி.
திமுகவின் அடிமட்ட தொண்டனுக்கும் பதவி தேடி வரும் என்பதற்கு நான் எடுத்துக்காட்டு. குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முக்கியத்துவம் அளிப்பேன். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வார்டில் இருந்து என்னைத் துணை மேயராக அறிவிக்கப்பட்டு இருப்பது இப்பகுதி மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துணை மேயர் வாய்ப்பை நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கு வாய்ப்பை தேடிக் தந்த முதலமைச்சர் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நன்றி” என அவர் தெரிவித்தார்.
கோவை பி.கே.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் இரா.வெற்றி செல்வன். 51-வயதான இவர் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். இவர் திமுகவில் கோவை மாநகராட்சி 92-வது வட்ட செயலாளராகப் பதவி வகித்து வருகிறார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சொந்த வார்டான 92-வது வார்டில் அதிமுக வேட்பாளரைத் தோற்கடித்து, வெற்றி செல்வன் முதல் முறையாக மாமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் துணை மேயர் வேட்பாளராக வெற்றி செல்வன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்துப் பேசிய வெற்றி செல்வன், “எனக்கு வாக்களித்த மக்களுக்கும், வாய்ப்பு வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் மாவட்டச் செயலாளர்களுக்கும் நன்றி.
திமுகவின் அடிமட்ட தொண்டனுக்கும் பதவி தேடி வரும் என்பதற்கு நான் எடுத்துக்காட்டு. குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முக்கியத்துவம் அளிப்பேன். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வார்டில் இருந்து என்னைத் துணை மேயராக அறிவிக்கப்பட்டு இருப்பது இப்பகுதி மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துணை மேயர் வாய்ப்பை நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கு வாய்ப்பை தேடிக் தந்த முதலமைச்சர் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நன்றி” என அவர் தெரிவித்தார்.