தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்துடன் கொடிசியா இணைந்து அந்த நிறுவனத்தின் பல்வேறு திட்டங்கள் குறித்த ஒரு விழிப்புணர்வு நிகழ்வை நடத்தியது.
கோவை: தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்துடன் கொடிசியா இணைந்து அந்த நிறுவனத்தின் பல்வேறு திட்டங்கள் குறித்த ஒரு விழிப்புணர்வு நிகழ்வை 02.03.2022 புதன்கிழமை கொடிசியா நிர்வாகிகள், முன்னாள் தலைவர்கள், மூத்த உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் கொடிசியா உறுப்பினர்களோடு, சகோதர தொழில் அமைப்புகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
கொடிசியா தலைவர் எம்.வி.ரமேஷ் பாபு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றார். நிகழ்வின் சிறப்பு விருந்தினராகத் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஹன்ஸ்ராஜல் வர்மா, ஐஏஎஸ் கலந்துகொண்டார். அவர் பேசும்போது, சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், நிதி உதவி பெறுவதில் அவை சந்திக்கும் சிக்கல்களைப் பற்றி எடுத்துரைப்பதோடு, மற்ற குறைகளையும் அரசுக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதுபோக இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பார்வையாளர்களிடமும் இருந்தும் ஆலோசனைகளை வரவேற்பதாகக் கூறினார். அந்த குறைகளை விரைந்து தீர்ப்பதாக, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் இயக்குநர் 19.சீனிவாசன் நிகழ்வில் பேசினார். தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக மண்டல மேலாளர் ரமேஷ் அந்த நிறுவனத்தின் பல்வேறு நிதி வசதி திட்டங்களைப் பற்றி எடுத்துக் கூறினார். கலந்து கொண்டவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கும் அங்கே பதிலளிக்கப்பட்டது. இறுதியாக கொடிசியாவின் கெளரவச் செயலாளர் எம்.கார்த்திகேயன் நன்றி கூறினார்.
கொடிசியா தலைவர் எம்.வி.ரமேஷ் பாபு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றார். நிகழ்வின் சிறப்பு விருந்தினராகத் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஹன்ஸ்ராஜல் வர்மா, ஐஏஎஸ் கலந்துகொண்டார். அவர் பேசும்போது, சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், நிதி உதவி பெறுவதில் அவை சந்திக்கும் சிக்கல்களைப் பற்றி எடுத்துரைப்பதோடு, மற்ற குறைகளையும் அரசுக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதுபோக இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பார்வையாளர்களிடமும் இருந்தும் ஆலோசனைகளை வரவேற்பதாகக் கூறினார். அந்த குறைகளை விரைந்து தீர்ப்பதாக, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் இயக்குநர் 19.சீனிவாசன் நிகழ்வில் பேசினார். தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக மண்டல மேலாளர் ரமேஷ் அந்த நிறுவனத்தின் பல்வேறு நிதி வசதி திட்டங்களைப் பற்றி எடுத்துக் கூறினார். கலந்து கொண்டவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கும் அங்கே பதிலளிக்கப்பட்டது. இறுதியாக கொடிசியாவின் கெளரவச் செயலாளர் எம்.கார்த்திகேயன் நன்றி கூறினார்.