இனி வரும் நாள்களில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டாலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை.
கோவை: கோவையில் கடந்த 2 மாதங்களில் 15 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் 2021ம் ஆண்டு நடைபெற இருந்த 99 குழந்தை திருமணங்கள் குறித்த தகவல்கள் பெறப்பட்டு, அவை தடுத்து நிறுத்தப்பட்டன. 42 திருமணங்கள் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கடந்த ஜனவரி, பிப்ரவரி என 2 மாதங்களில் மட்டும் 15 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. 8 திருமணங்கள் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுவரை திருமணம் நடைபெற்றால் மட்டுமே சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேலும், போக்சோ சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படாமல் இருந்து வந்தது.
இனி வரும் நாள்களில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டாலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குழந்தை திருமணத்தைத் தடுக்கும் வகையில் மக்கள் அதிகம் கூடும் காந்திபுரம், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட அனைத்து பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் விழிப்புணா்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.
இது தொடர்பாக, மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் 2021ம் ஆண்டு நடைபெற இருந்த 99 குழந்தை திருமணங்கள் குறித்த தகவல்கள் பெறப்பட்டு, அவை தடுத்து நிறுத்தப்பட்டன. 42 திருமணங்கள் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கடந்த ஜனவரி, பிப்ரவரி என 2 மாதங்களில் மட்டும் 15 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. 8 திருமணங்கள் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுவரை திருமணம் நடைபெற்றால் மட்டுமே சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேலும், போக்சோ சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படாமல் இருந்து வந்தது.
இனி வரும் நாள்களில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டாலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குழந்தை திருமணத்தைத் தடுக்கும் வகையில் மக்கள் அதிகம் கூடும் காந்திபுரம், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட அனைத்து பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் விழிப்புணா்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.