பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய இரண்டு நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற 201 வேட்பாளர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
கோவை: கோவை பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நகராட்சி, பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.
பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய இரண்டு நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற 201 வேட்பாளர்கள் அந்தந்த நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆணையாளர்கள், பேரூராட்சி செயலர்கள் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டனர்.

பொள்ளாச்சி நகராட்சியில் 36 வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 31 வேட்பாளர்கள், அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 3 பேர் மற்றும் சுயேட்சைகள் 2 பேரும் ஆணையாளர் தானு மூர்த்தி முன்னிலையில் முறைப்படி பதவி ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய இரண்டு நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற 201 வேட்பாளர்கள் அந்தந்த நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆணையாளர்கள், பேரூராட்சி செயலர்கள் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டனர்.
பொள்ளாச்சி நகராட்சியில் 36 வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 31 வேட்பாளர்கள், அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 3 பேர் மற்றும் சுயேட்சைகள் 2 பேரும் ஆணையாளர் தானு மூர்த்தி முன்னிலையில் முறைப்படி பதவி ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.