கோவையில் தனியார் நிறுவன ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் கொள்ளை..!

இந்த சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


கோவை: கோவை சிங்காநல்லூர் அருகே தனியார் நிறுவன ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து, உள்ளே இருந்த 10 சவரன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ். காலணி பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரது மகன் மணிகண்டன் (37). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், கடந்த 28ம் தேதி மணிகண்டன் தன் குடும்பத்துடன் சங்கரன்கோவிலில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.

இதையடுத்து, இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டின் அருகே வசித்து வரும் பாபு என்பவர் பார்த்த போது மணிகண்டனின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பாபு மற்றும் மணிகண்டன் சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உள்ளே சென்று பார்த்த போது வீட்டிலிருந்த பீரோவை உடைத்து உள்ளே இருந்த 10 சவரன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

மேலும், அங்கு வந்த தடயவியல் துறை அதிகாரிகள் வீட்டில் பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர். சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...