தொலைநிலை கல்வியில் எம்.பி.ஏ., - எம்.சி.ஏ. மாணவர் சேர்க்கை துவக்கம் - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு..!

வரும் 25ம் தேதிக்குள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம், மற்றும் கூடுதல் விபரங்களை www.annauniv.edu/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


கோவை: தொலைநிலை கல்வியில் எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., உள்ளிட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலையின் தொலைநிலை கல்வி பிரிவில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் நடத்தப்படுகின்றன.

இதன்படி, எம்.பி.ஏ. - எம்.சி.ஏ. - எம்.எஸ்சி. ஆகிய முதுநிலை படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எம்.பி.ஏ. படிப்பில் பொது மேலாண்மை, தொழில்நுட்பம், சந்தைப்படுத்துதல், மனிதவளம், நிதி சேவை, மருத்துவ சேவை, சுற்றுலா மற்றும் இயக்க மேலாண்மை என எட்டு வகை பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

பிளஸ் 2 தேர்ச்சிக்குப் பின் பட்டப் படிப்பு படித்தவர்கள் எந்த நுழைவுத் தேர்வும் இன்றி எம்.பி.ஏ. படிப்பில் சேரலாம். எம்.எஸ்சி.யில் கணினி அறிவியல் பாடப்பிரிவு நடத்தப்படுகிறது.

எம்.சி.ஏ.வில் சேர இந்த மாதம் 27ல் அண்ணா பல்கலையின் தொலைநிலை கல்வி இயக்குனரகம் நடத்தும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் வழி விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது.

மேலும், வரும் 25ம் தேதிக்குள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். கூடுதல் விபரங்களை www.annauniv.edu/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...