கோவை வெள்ளியங்கிரி 3-வது மலையில் மயங்கி விழுந்த திண்டுக்கல் இளைஞர் உயிரிழப்பு

உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக போலீசார் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவை வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞர் 3-வது மலையில் சென்ற போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவை பூண்டி வெள்ளிங்கிரி மலைத்தொடரில்7-ஆவது மலையில் உள்ள சுயம்பு லிங்க சுவாமியைத் தரிசனம் செய்ய, கோவைமட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பக்தர்கள் கடந்த 2-தினங்களாக 7-மலைகளில் பாதயாத்திரையாக நடந்து செல்ல துவங்கி உள்ளனர்.

வெள்ளிங்கிரி மலை ஏற்றதற்காக அங்கு வரும் பக்தர்கள் கையில் மூங்கில் குச்சியுடன் தொடர்ந்து நடந்து சென்று வரும் நிலையில், வனத்துறை ஊழியர்களும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சிவராத்திரியை முன்னிட்டு சுயம்புலிங்க சுவாமியைத் தரிசனம் செய்யத் திண்டுக்கல் மாவட்டம் பெரியூர்பட்டியை சேர்ந்த பழனிவேல் (24). என்பவர் நேற்று மாலை தனது நண்பர்களுடன் மலை ஏறியுள்ளார்.

அப்போது மூன்றாவது மலை பாம்பாட்டி சித்தர் குகை அருகே வந்தபோது திடீரென பழனிவேல் மயங்கிக் கீழே விழுந்ததாகத் தெரிகிறது. அப்போது அங்கிருந்த நண்பர்கள் முதலுதவி செய்தனர்.

இருப்பினும் திடீரென வலிப்பு ஏற்பட்டதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, உடன் சென்ற நண்பர்கள் பழனிவேல் உடலை மலை அடிவாரத்திற்கு எடுத்து வந்தனர். மேலும் ஆலாந்துறை போலீசுக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்துசம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பழனிவேல் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...