கோவை வால்பாறை நகராட்சியில் தமிழக முதலமைச்சரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு பிரியாணி வழங்கி கொண்டாட்டம்..!

10வது வார்டு உறுப்பினர் காமாட்சி கோழிக்கடை கணேசன் மற்றும் 9வது வார்டு உறுப்பினர் மகுடீஸ்வரன் இணைந்து பழங்குடியின உண்டு, உறைவிட பள்ளி குழந்தைகளுக்கு பிரியாணி வழங்கினர்.


கோவை: கோவை வால்பாறை பகுதியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை கட்சி நிர்வாகிகள் கொண்டாடினர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு 10வது வார்டு உறுப்பினர் காமாட்சி கோழிக்கடை கணேசன் மற்றும் 9வது வார்டு உறுப்பினர் மகுடீஸ்வரன் இணைந்து பழங்குடியின மக்கள் குழந்தைகள் படிக்கும் உண்டு, உறைவிட பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவாக பிரியாணி வழங்கி முதலமைச்சர் பிறந்த நாளை கொண்டாடினர்.



இந்நிகழ்வில், நகர பொறுப்பாளர் பால்பாண்டி, வர்த்தக அணி துணை அமைப்பாளர் j பாஸ்கர், 14வது வார்டு உறுப்பினர் அழகு சுந்தரவல்லி செல்வம் 21வது வார்டு உறுப்பினர் உமா மகேஸ்வரி சுதாகர், 11வது வார்டு உறுப்பினர் செந்தில், 12 வது வார்டு உறுப்பினர் அன்பரசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...