கொரோனா வழிமுறைகளை மீறி கூட்டம் கூட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி உள்பட 8 எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 5 கோடி மதிப்பிலான சொத்துக்களை மிரட்டி வாங்கியதாக மேலும் ஒரு வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது நடவடிக்கையை கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் ஒரு பகுதியாக, கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கொரோனா வழிமுறைகளை மீறி கூட்டம் கூட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜூணன், பி.ஆர்.ஜி.அருண்குமார், ஜெயராம், கந்தசாமி, செல்வராஜ், தாமோதரன், அமுல் கந்தசாமி, மற்றும் அதிமுக செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மீது பந்தய சாலை போலீசார் இந்திய தண்டனை சட்டம் (143), (341), (269) 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
சென்னையில் திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 5 கோடி மதிப்பிலான சொத்துக்களை மிரட்டி வாங்கியதாக மேலும் ஒரு வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது நடவடிக்கையை கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் ஒரு பகுதியாக, கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கொரோனா வழிமுறைகளை மீறி கூட்டம் கூட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜூணன், பி.ஆர்.ஜி.அருண்குமார், ஜெயராம், கந்தசாமி, செல்வராஜ், தாமோதரன், அமுல் கந்தசாமி, மற்றும் அதிமுக செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மீது பந்தய சாலை போலீசார் இந்திய தண்டனை சட்டம் (143), (341), (269) 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.