இதனிடையே, மாயமான சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வினிதா என்ற பணிப் பெண்ணை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை: கோவையில் தொழிலதிபர் வீட்டிலிருந்த 54 சவரன் தங்க நகைகள் மற்றும் வைர மோதிரம் திருடிய வழக்கில் வீட்டில் வேலை செய்து வந்த பணிப்பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை ராமநாதபுரம் முத்துசாமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவர் ஒரு தொழிலதிபர். இவரது மனைவி தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், கடந்த ஜனவரி 23ம் தேதி ராஜசேகர் தனது தாயின் முதலாம் ஆண்டு நினைவு தினத்திற்காக குடும்பத்துடன் தனது சொந்த ஊரான தேவகோட்டைக்கு சென்றுள்ளார்.
பின்னர், மூன்று நாட்களுக்கு பிறகு கோவைக்கு வந்துள்ளனர். அதன் பின்னர், அவரது வீட்டில் வேலை செய்து வந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வினிதா என்ற பணிப் பெண் வேலைக்கு வராமல் இருந்தாக தெரிகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் ராஜசேகர் தனது குடும்ப நிகழ்ச்சிக்காக செல்ல தயாராக பீரோவை திறந்து பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் 54 சவரன் தங்க நகைகள் மற்றும் வைர மோதிரம் மாயமானது தெரியவந்தது.
இதனையடுத்து, வீட்டில் பணியாற்றிய வினிதா மீது சந்தேகம் ஏற்பட்டு, வினிதா தங்கியிருந்த வீட்டிற்குச் சென்று பார்த்தபோது அவர் வீட்டை காலி செய்து விட்டு சென்றது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக ராஜசேகர் ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாயமான வினிதாவை தேடி வருகின்றனர்.
கோவை ராமநாதபுரம் முத்துசாமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவர் ஒரு தொழிலதிபர். இவரது மனைவி தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், கடந்த ஜனவரி 23ம் தேதி ராஜசேகர் தனது தாயின் முதலாம் ஆண்டு நினைவு தினத்திற்காக குடும்பத்துடன் தனது சொந்த ஊரான தேவகோட்டைக்கு சென்றுள்ளார்.
பின்னர், மூன்று நாட்களுக்கு பிறகு கோவைக்கு வந்துள்ளனர். அதன் பின்னர், அவரது வீட்டில் வேலை செய்து வந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வினிதா என்ற பணிப் பெண் வேலைக்கு வராமல் இருந்தாக தெரிகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் ராஜசேகர் தனது குடும்ப நிகழ்ச்சிக்காக செல்ல தயாராக பீரோவை திறந்து பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் 54 சவரன் தங்க நகைகள் மற்றும் வைர மோதிரம் மாயமானது தெரியவந்தது.
இதனையடுத்து, வீட்டில் பணியாற்றிய வினிதா மீது சந்தேகம் ஏற்பட்டு, வினிதா தங்கியிருந்த வீட்டிற்குச் சென்று பார்த்தபோது அவர் வீட்டை காலி செய்து விட்டு சென்றது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக ராஜசேகர் ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாயமான வினிதாவை தேடி வருகின்றனர்.