கோவை ராமநாதபுரம் அருகே தொழிலதிபர் வீட்டில் 54 சவரன் தங்க நகைகள் மற்றும் வைர மோதிரம் கொள்ளை..!

இதனிடையே, மாயமான சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வினிதா என்ற பணிப் பெண்ணை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: கோவையில் தொழிலதிபர் வீட்டிலிருந்த 54 சவரன் தங்க நகைகள் மற்றும் வைர மோதிரம் திருடிய வழக்கில் வீட்டில் வேலை செய்து வந்த பணிப்பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை ராமநாதபுரம் முத்துசாமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவர் ஒரு தொழிலதிபர். இவரது மனைவி தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், கடந்த ஜனவரி 23ம் தேதி ராஜசேகர் தனது தாயின் முதலாம் ஆண்டு நினைவு தினத்திற்காக குடும்பத்துடன் தனது சொந்த ஊரான தேவகோட்டைக்கு சென்றுள்ளார்.

பின்னர், மூன்று நாட்களுக்கு பிறகு கோவைக்கு வந்துள்ளனர். அதன் பின்னர், அவரது வீட்டில் வேலை செய்து வந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வினிதா என்ற பணிப் பெண் வேலைக்கு வராமல் இருந்தாக தெரிகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் ராஜசேகர் தனது குடும்ப நிகழ்ச்சிக்காக செல்ல தயாராக பீரோவை திறந்து பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் 54 சவரன் தங்க நகைகள் மற்றும் வைர மோதிரம் மாயமானது தெரியவந்தது.

இதனையடுத்து, வீட்டில் பணியாற்றிய வினிதா மீது சந்தேகம் ஏற்பட்டு, வினிதா தங்கியிருந்த வீட்டிற்குச் சென்று பார்த்தபோது அவர் வீட்டை காலி செய்து விட்டு சென்றது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக ராஜசேகர் ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாயமான வினிதாவை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...