கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் (TURIP) தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் தார் சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் (TURIP) தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் தார் சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா இன்று (28.02.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.75 நியூ போயஸ் கார்டன் பகுதியில் 1 முதல் 7 வது வீதி வரை ரூ.25.00 இலட்சம் மதிப்பீட்டில் 750 மீட்டர் தொலைவிற்கு 4 மீட்டர் அகலத்திலும், சலாமத் நகர் பகுதியில் ரூ.31.00 இலட்சம் மதிப்பீட்டில் 701 மீட்டர் தொலைவிற்கு 4.5 மீட்டர் அகலத்திலும் (TURIP) தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உள்கட்டமைப்பு திட்டத்தின்கீழ் தார் சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, இப்பணிகளை ஒருவார காலத்தில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டுமெனவும், கோவை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் தற்போது சித்தார்த் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனை விரைவாகவும், தரமாகவும் செய்து முடிக்க வேண்டுமெனவும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, கிழக்கு மண்டல உதவி ஆணையர் மாரிசெல்வி, உதவி செயற்பொறியாளர் சுந்தாராஜன், உதவிப் பொறியாளர் சத்யா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.75 நியூ போயஸ் கார்டன் பகுதியில் 1 முதல் 7 வது வீதி வரை ரூ.25.00 இலட்சம் மதிப்பீட்டில் 750 மீட்டர் தொலைவிற்கு 4 மீட்டர் அகலத்திலும், சலாமத் நகர் பகுதியில் ரூ.31.00 இலட்சம் மதிப்பீட்டில் 701 மீட்டர் தொலைவிற்கு 4.5 மீட்டர் அகலத்திலும் (TURIP) தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உள்கட்டமைப்பு திட்டத்தின்கீழ் தார் சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, இப்பணிகளை ஒருவார காலத்தில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டுமெனவும், கோவை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் தற்போது சித்தார்த் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனை விரைவாகவும், தரமாகவும் செய்து முடிக்க வேண்டுமெனவும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, கிழக்கு மண்டல உதவி ஆணையர் மாரிசெல்வி, உதவி செயற்பொறியாளர் சுந்தாராஜன், உதவிப் பொறியாளர் சத்யா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.