2,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தார்.
கோவை: கோவை வால்பாறை நகராட்சி உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற 10வது வார்டு உறுப்பினர் காமாட்சி கணேசன் தேயிலை தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் நகராட்சி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில் 22ம் தேதி வெற்றி வேட்பாளர்கள் அறிவித்த நிலையில் 10வது வார்டினைச் சேர்ந்த திமுக முன்னாள் நகர்மன்ற தலைவர் கோழிக்கடை கணேசன் அவர்களது மனைவி காமாட்சி இரண்டாயிரத்து 500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதனைத்தொடர்ந்து வாக்களித்த பொதுமக்களுக்கும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வண்ணமாக நடுமலை எஸ்டேட் பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களை சந்தித்து அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி வாக்கு அளித்ததற்கு நன்றி கூறி அவர்களுக்கு உண்டான பிரச்சனைகளைக் கேட்டறிந்து, அதனை சரி செய்து தருவதாகவும் உறுதி கூறி வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் நகராட்சி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில் 22ம் தேதி வெற்றி வேட்பாளர்கள் அறிவித்த நிலையில் 10வது வார்டினைச் சேர்ந்த திமுக முன்னாள் நகர்மன்ற தலைவர் கோழிக்கடை கணேசன் அவர்களது மனைவி காமாட்சி இரண்டாயிரத்து 500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதனைத்தொடர்ந்து வாக்களித்த பொதுமக்களுக்கும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வண்ணமாக நடுமலை எஸ்டேட் பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களை சந்தித்து அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி வாக்கு அளித்ததற்கு நன்றி கூறி அவர்களுக்கு உண்டான பிரச்சனைகளைக் கேட்டறிந்து, அதனை சரி செய்து தருவதாகவும் உறுதி கூறி வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.