ஈஷா மஹாசிவராத்திரி அனைத்து கலாச்சார தடைகளையும்‌ கடந்தது: துணை குடியரசு தலைவர்‌ புகழாரம்‌

ஈஷா மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு துணை குடியரசுத் தலைவர்‌ வெங்கையா நாயுடு, நேபாள்‌ கம்யூனிஸ்ட்‌ கட்சியின்‌ தலைவர்‌ சர்மா ஒலி சத்குருவுக்கு வாழ்த்து கூறியுள்ளனர்‌.



கோவை: மஹாசிவராத்திரியை முன்னிட்டு துணை குடியரசு தலைவர்‌ சத்குருவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகத் துணை குடியரசு தலைவர்‌ அனுப்பியுள்ள வாழ்த்து வீடியோவில்‌, “ஈஷாவில்‌ நடக்கும்‌ மஹாசிவராத்திரி விழா கொண்டாட்டம்‌, உலகம்‌ முழுவதும்‌ இருந்து வரும்‌ சிவ பக்தர்களுக்கு அனைத்து விதமான கலாச்சார தடைகளையும்‌ தாண்டி, தெய்வீக மற்றும்‌ தனித்துவமான சூழ்நிலையை வழங்குகிறது.

இந்த நன்னாளில்‌, சிவ பெருமான்‌ நம்‌ அனைவருக்கும்‌ தனது தெய்வீக ஆசிகளை வழங்கி, உண்மை, தூய்மை மற்றும்‌ தெய்வீகத்‌ தன்மையுடன்‌ முன்னேற்றம்‌ பெற வலியைத் தரட்டும்‌” என தெரிவித்துள்ளார்‌.

இதற்கு நன்றி கூறும்‌ விதமாக ஈஷா அறக்கட்டளை சார்பில்‌, “ஈஷாவில்‌ நடக்கும்‌ மஹாசிவராத்திரி கொண்டாட்டத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள துணை குடியரசு தலைவர்‌ வெங்கையா நாயடு அவர்களுக்கு எங்களது நன்றிகள்‌” என ட்விட்டரில்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/ishafoundation/status/1498136106050539522 ?t=KMgUo2sYoauHbjHX4I4Rilw&s=19

நேபாள்‌ கம்யூனிஸ்ட்‌ கட்சியின்‌ தலைவர்‌ கே.பி. சர்மா ஒலி சத்குரு அவர்களுக்கு அனுப்பியுள்ள வாழ்த்து கடிதத்தில்‌, “மஹாசிவராத்திரி விழா நேபாள்‌ மற்றும்‌ இந்தியாவில்‌ மிகுந்த முக்கியத்துவத்துடன்‌ கொண்டாடப்படுகிறது. நேபாள‌ ராணுவம்‌ மஹாசிவராத்திரி இனத்தை ராணுவ தனமாக கொண்டாடுகிறது. சிவனை யோகத்தின்‌ மூலமாகவும்‌, ஆதியோகியாகவும்‌ ஏற்றுக்கொண்டவர்கள்‌ அவர்‌ எல்லா இடங்களிலும்‌ நிறைந்து இருக்கிறார்‌ என நம்புகின்றனர்‌.” என கூறியுள்ளார்‌.

இதற்கு ஈஷா அறக்கட்டளை சார்பில்‌, “நமஸ்காரம்‌ சர்மா ஒலி ஜி, உங்களுடைய மஹாசிவராத்திரி வாழ்த்துக்கு நன்றி. உங்களுக்கும்‌ உங்கள்‌ நாட்டின்‌ குடிமக்கள்‌ அனைவருக்கும்‌ இனிய மஹாசிவராத்துரி வாழ்த்துக்கள்‌” என டிவிட்டரில்‌ பதிவிடப்பட்டுள்ளது.

https://twitter.com/ishafoundation/status/1498210436453335040 ?t=98nHGPeJSIZVy-PQpk65RQ&s=19

இதற்கு முன்பு பாரத பிரதமர்‌ நரேந்திர மோடி அவர்களும்‌ ஈஷா மஹாசிவராத்திரிக்கு வாழ்த்துக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...