உக்ரைனில் இருக்கும் தங்களது குழந்தைகளை மீட்டு வர வலியுறுத்தி பெற்றோர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் நிலவி வரும் நிலையில், உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை மீட்டு வர பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


கோவை: உக்ரைனில் இருக்கும் தங்களது குழந்தைகளை மீட்டு வர வலியுறுத்தி கோவை பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் நிலவி வரும் நிலையில் உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை மீட்டு வர பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் கோவை மாவட்டத்தில் யாரேனும் அவரது பிள்ளைகள் உறவினர்கள் உக்ரைனில் இருந்தால், அவர்களை மீட்டு வர மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையோ அல்லது இணைய வழியாகவோ தொடர்பு கொள்ளலாம் என அறிவித்திருந்தார்.



இந்த நிலையில், கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (கோவில் அர்ச்சகர்) அவரது மகளை உக்ரைனில் இருந்து மீட்டு வர மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.



இது தொடா்பாக அவா் அளித்த மனுவில், அவரது மகள் ஐஸ்வர்யா உக்ரைனில் PETRO MOHYLA BLACK SEA NATIONAL UNIVERSITY ல் 4ம் ஆண்டு மருத்துவம் படித்து வருவதாகவும், அங்கு நடைபெற்று வரும் போரின் காரணமாக நாடு திரும்ப முடியாமல் தவித்து வருவதாகவும் எனவே அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு மகளை மீட்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதே போன்று, இடிகரை பகுதியைச் சேர்ந்த ராமசந்திரன் தனது மகன் சரத் சந்திரன் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதால் பதுங்கு குழியில் எவ்வித வசதியும் இல்லாமல் தவித்து வருவதாக சரத் தெரிவித்ததால் உடனடியாக தனது மகனை மீட்டு வர நடவடிக்கை எடுக்கும் படி மனு அளித்துள்ளனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...