கோவையில் பக்கத்து வீட்டு நபரின் பைக்கை தீ வைத்து எரித்தவர் கைது..!

சிசிடிவியில் பதிவான காட்சிகளில் இரவில் பைக் மீது துணியில் தீப்பற்றி வைத்தது தெரியவந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.


கோவை: கோவையில் பக்கத்து வீட்டு நபரின் பைக்குக்கு தீ வைத்த நபர் கைது செய்யப்பட்டார்.

கோவை புலியகுளம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் பிரபு (32). இவர் பூக்கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், கடந்த 24ம் தேதி இரவு பிரபு தனது இரு சக்கர வாகனத்தை வீட்டுக்கு முன் நிறுத்தி விட்டு தூங்க சென்று விட்டார். அன்று இரவு ஏதோ சத்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்த போது, அவரது இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.

இதையடுத்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். 'வாகனத்தில் தீப்பிடித்தது எப்படி' என்று கண்டறிவதற்காக, அக்கம் பக்கத்தில் இருந்த சிசிடிவி காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்தனர்.

இதில், பக்கத்து வீட்டில் வசிக்கும் கூலித்தொழிலாளியான கில்பர்ட் (எ) சபரி (40), துணியில் தீப்பற்ற வைத்து பைக் மீது போடும் காட்சி சிசிடிவியில் பதிவாகியிருந்தது.

இதனையடுத்து, பிரபு ராமநாதபுரம் போலீசில் புகார் தெரிவித்தார். வழக்கை விசாரித்த எஸ்.ஐ., குணசேகரன், வாகனத்துக்கு தீ வைத்த கில்பர்ட்டை கைது செய்தார். பின்னர், கோர்ட் உத்தரவுப்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...