சிசிடிவியில் பதிவான காட்சிகளில் இரவில் பைக் மீது துணியில் தீப்பற்றி வைத்தது தெரியவந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
கோவை: கோவையில் பக்கத்து வீட்டு நபரின் பைக்குக்கு தீ வைத்த நபர் கைது செய்யப்பட்டார்.
கோவை புலியகுளம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் பிரபு (32). இவர் பூக்கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், கடந்த 24ம் தேதி இரவு பிரபு தனது இரு சக்கர வாகனத்தை வீட்டுக்கு முன் நிறுத்தி விட்டு தூங்க சென்று விட்டார். அன்று இரவு ஏதோ சத்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்த போது, அவரது இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.
இதையடுத்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். 'வாகனத்தில் தீப்பிடித்தது எப்படி' என்று கண்டறிவதற்காக, அக்கம் பக்கத்தில் இருந்த சிசிடிவி காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்தனர்.
இதில், பக்கத்து வீட்டில் வசிக்கும் கூலித்தொழிலாளியான கில்பர்ட் (எ) சபரி (40), துணியில் தீப்பற்ற வைத்து பைக் மீது போடும் காட்சி சிசிடிவியில் பதிவாகியிருந்தது.
இதனையடுத்து, பிரபு ராமநாதபுரம் போலீசில் புகார் தெரிவித்தார். வழக்கை விசாரித்த எஸ்.ஐ., குணசேகரன், வாகனத்துக்கு தீ வைத்த கில்பர்ட்டை கைது செய்தார். பின்னர், கோர்ட் உத்தரவுப்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை புலியகுளம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் பிரபு (32). இவர் பூக்கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், கடந்த 24ம் தேதி இரவு பிரபு தனது இரு சக்கர வாகனத்தை வீட்டுக்கு முன் நிறுத்தி விட்டு தூங்க சென்று விட்டார். அன்று இரவு ஏதோ சத்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்த போது, அவரது இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.
இதையடுத்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். 'வாகனத்தில் தீப்பிடித்தது எப்படி' என்று கண்டறிவதற்காக, அக்கம் பக்கத்தில் இருந்த சிசிடிவி காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்தனர்.
இதில், பக்கத்து வீட்டில் வசிக்கும் கூலித்தொழிலாளியான கில்பர்ட் (எ) சபரி (40), துணியில் தீப்பற்ற வைத்து பைக் மீது போடும் காட்சி சிசிடிவியில் பதிவாகியிருந்தது.
இதனையடுத்து, பிரபு ராமநாதபுரம் போலீசில் புகார் தெரிவித்தார். வழக்கை விசாரித்த எஸ்.ஐ., குணசேகரன், வாகனத்துக்கு தீ வைத்த கில்பர்ட்டை கைது செய்தார். பின்னர், கோர்ட் உத்தரவுப்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.