மஹாசிவராத்திரியை முன்னிட்டு பிரதமர்‌ மோடி சத்குருவுக்கு வாழ்த்து: மனிதக் குலத்திற்கு ஆசி வழங்க ஆதியோகியிடம்‌ பிரார்த்தனை

“நம்‌ மனம்‌, உடல்‌ மற்றும்‌ புத்தியை ஒருங்கிணைக்க ஆதியோகி நமக்கு வழிகாட்டுகிறார்‌” என பிரதமர்‌ மோடி சத்குருவுக்கு அனுப்பிய மஹாசிவராத்திரி வாழ்த்து கடிதத்தில்‌ குறிப்பிட்டுள்ளார்‌.



கோவை: மஹாசிவராத்திரியை முன்னிட்டு பிரதமர்‌ மோடி சத்குருவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“நம்‌ மனம்‌, உடல்‌ மற்றும்‌ புத்தியை ஒருங்கிணைக்க ஆதியோகி நமக்கு வழிகாட்டுகிறார்‌” என பிரதமர்‌ மோடி சத்குருவுக்கு அனுப்பிய மஹாசிவராத்திரி வாழ்த்து கடிதத்தில்‌ குறிப்பிட்டுள்ளார்‌.

இது தொடர்பாக அவர்‌ ஈஷா நிறுவனர்‌ சத்குருவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்‌ கூறியுள்ளதாவது:-

புனிதமான மஹாசிவராத்திரி கொண்டாட்டத்திற்கு தாங்கள்‌ செய்துவரும்‌ ஏற்பாடுகளை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்‌.

மஹாசிவராத்திரி விழா அனைவருக்கும்‌ ஒரு உத்வேகத்தை அளிக்கும்‌ ஆதாரமாக உள்ளது. ஆதியோகி எங்கும்‌ நிறைந்து இருக்கிறார்‌ என்பதை நினைவு கூர்வதற்கு இது சிறந்த சந்தர்ப்பமாகும்‌. நம்முடைய மனம்‌, உடல்‌ மற்றும்‌ புத்தி ஆகியவற்றை ஒருங்கிணைத்து, ஜீவனிலிருந்து சிவனாக மாறுவதற்கு ஆதியோகி நமக்கு வழிகாட்டுகிறார்‌.

மக்களின்‌ ஆன்மீக வளர்ச்சிக்காகவும்‌, அவர்களின்‌ வாழ்க்கை மேம்படுவதற்கும்‌ நீங்கள்‌ எடுத்து வரும்‌ அயராத முயற்சிகள்‌ மிகவும்‌ குறிப்பிடத்தக்கவை. சுற்றுச்சூழல்‌ பாதுகாப்பு, கிராமப்புற மேம்பாட்டிற்கான திட்டங்கள்‌, கல்வி, மருத்துவம்‌ மற்றும்‌ சமூக மறுமலர்ச்சி என பன்முக திட்டங்களை நீங்கள்‌ முன்னெடுத்து செய்துவருகிறீர்கள்‌. உங்களுடைய இந்த முயற்சிகள்‌ அனைத்தும்‌ எண்ணற்ற மக்களின்‌ வாழ்வில்‌ நேர்மறை மாற்றத்தை உருவாக்கும்‌ நோக்கக்தை கொண்டுள்ளது.

இந்த மஹாசிவராத்திரி விழா, மனிதக்குலம்‌ தனது அறியாமையிலிருந்தும்‌, இருளிலிருந்தும்‌ கடந்து வருவதற்கான பாதையை நமக்கு காட்டட்டும்‌. மனித குலத்தின்‌ மீது தனது ஆசிகளை பொழியுமாறு ஆதியோகியை நான்‌ பிரார்த்திக்கிறேன்‌.

இவ்வாறு பிரதமர்‌ மோடி கூறியுள்ளார்‌.

இதற்கு நன்றி தெரிவிக்கும்‌ விதமாக ஈஷா அறக்கட்டளை வெளியிட்டுள்ள ட்விட்டர்‌ பதிவில்‌, “ஆதியோகியில்‌ நடக்கும்‌ மஹாசிவராத்திரி கொண்டாட்டத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள பிரதமர்‌ நரேந்திர மோம ஜி அவர்களுக்கு எங்களது நன்றிகள்‌ என குறிப்பிடப்பட்டுள்ளது.

https://twitter.com/ishafoundation/status/1497791423118147589 ?t=9i7j;BDSn4eA1Mcq5VisEfg&s=19

ஈஷா மஹாசிவராத்திரி விழா மார்ச்‌ 1-ம்‌ தேதி மாலை 6 மணிக்குத் தொடங்கி மறுநாள்‌ காலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இவ்விழா இணையதளம்‌ வழியாக 170 நாடுகளிலிருந்து சுமார்‌ 10 கோடிக்கும்‌ அதிகமான மக்களின்‌ பார்வையைக் கவர்கிறது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...