கோவையில் பத்திரிக்கை அலுவலக விளம்பர பணத்தை கையாடல் செய்த ஊழியர் மீது மோசடி வழக்கு

சரவணம்பட்டி போலீசார் பத்திரிக்கை அலுவலக விளம்பர பணத்தை கையாடல் செய்த ஊழியர் மீது 408, 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஊழியர் சுரேஷ்குமாரை தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் பத்திரிக்கை அலுவலக விளம்பர பணத்தை கையாடல் செய்த ஊழியர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை கணபதி பகுதியில் மாலை முரசு பத்திரிகை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கோவை கிளை மேலாளர் துரை பிரகாஷ் சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில் கோவை சிவானந்த புரத்தைச் சேர்ந்த என்.சுரேஷ் குமார் என்பவர் போட்டோகிராபராகவும் விளம்பர முகவராகவும் கடந்த 9-ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு பல்வேறு அரசியல் பிரமுகர்களின் விளம்பரங்களை சுரேஷ்குமார் வாங்கி மாலை முரசு இதழில் வெளியிட்டு உள்ளார்.

அதற்கான மொத்த தொகையான 15-லட்சத்து 98-ஆயிரத்து 391-ரூபாயை நிறுவனத்திற்குச் செலுத்தாமல் பல மாதங்களாக இருந்து வந்துள்ளார். நிறுவனம் சார்பில் பலமுறை அவரிடம் கேட்டும் சரியான முறையில் பதிலளிக்காமல் இருந்துள்ளார்.

மேலும் கடந்த ஜனவரி மாதம் விளம்பரம் கொடுத்த விளம்பரதாரர்கள் இடம் கேட்டபொழுது விளம்பரத்திற்கு உரியத் தொகையை சுரேஷ்குமார் இடம் கொடுத்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இந்த விவரங்களை நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்குத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இதுகுறித்து சுரேஷ்குமார் இடம் கேட்டபோது சரியாகப் பதில் சொல்லாமல் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து வேலைக்கு வராமல் இருந்து வருகிறார். எனவே சுரேஷ்குமார் மீது நடவடிக்கை எடுத்து விளம்பரதாரர்களிடம் இருந்து வாங்கிய பணத்தை நிறுவனத்தில் செலுத்தாமல் நிறுவனத்தை ஏமாற்றிய 15-லட்சத்து 98-ஆயிரத்து 390- ரூபாயை மீட்டுத்தருமாறு புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து விசாரணை நடத்திய சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சுரேஷ்குமார் விளம்பரதாரர்கள் கொடுத்த பணத்தை வாங்கி அலுவலகத்திற்குக் கட்டாமல் மோசடி செய்ததை உறுதி செய்தார்.

தொடர்ந்து சரவணம்பட்டி போலீசார் சுரேஷ்குமார் மீது 408, 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள சுரேஷ்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...