விசைத்தறி தொழிலாளர்களுக்கு விடியல்‌ கிடைக்குமா? - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை

ஜனவரி 9-ஆம்‌ தேதியிலிருந்து இன்று வரை தொடர்ந்து நடைபெறும்‌ கூலிக்கு வேலை செய்யும்‌ விசைத்தறி தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்திற்குக் காரணம்‌ ஆளும்கட்சியின்‌ மெத்தன போக்கு என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


கோவை: விசைத்தறி தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஒரு முழுமையான மனிதனுக்கு ஆள்‌ பாதி ஆடை பாதி, என்ற முதுமொழி எல்லோரும்‌ அறிந்ததே. இதன்‌ மறைபொருளாக இதன்‌ மறைபொருள்‌ ஒவ்வொரு மனிதனுக்கும்‌ விவசாயியும்‌ நெசவாளர்‌ மிக மிக முக்கியம்‌ என்பதே.

ஒரு சமுதாயம்‌, நன்றாக இருக்கிறது என்றால்‌ அந்த சமுதாயத்தில்‌ உள்ள விவசாயியும்‌ நெசவாளரும்‌ நன்றாக இருக்கிறார்கள்‌ என்று அர்த்தம்‌. ஆனால்‌ இன்று கூலிக்கு வேலை செய்யும்‌ விசைத்தறி தொழிலாளர்களின்‌ நிலை கவலைக்கிடமாக உள்ளது. விசைத்தறி தொழில்‌ முற்றிலுமாக முடங்கி கிடக்கிறது. காரணம்பேட்டை பகுதியில்‌ சுமார்‌ 5-ஆயிரம்‌ தொழிலாளர்கள்‌ தொடர்ந்து மூன்று நாட்களாக அடையாள உண்ணாவிரதத்திலிருந்தனர்‌. அவர்களின்‌ குடும்பமும்‌ வேறுவழியின்றி உண்ணா நிலையில்‌ தான்‌ இருக்கிறார்கள்‌.

தற்போது பல்லடம்‌, சோமனூர்‌, அவிநாசி, புதுப்பாளையம்‌, மங்கலம்‌ ஆகிய பகுதிகளில்‌ ஆடிக்கொண்டிருந்த சுமார்‌ ஐந்து லட்சம்‌ விசைத்தறிகள்‌, மூடிக்கிடக்கிறது. இங்கே உழைத்துக்‌ கொண்டிருந்த இரண்டு லட்சம்‌ தொழிலாளர்கள்‌ வாடி கிடக்கிறார்கள்‌. கொரோனா தொற்றுநோயால்‌ கொடுமையாகப் பாதிக்கப்பட்ட பொருளாதார பின்னடைவிலிருந்து, மீண்டு வர முயற்சிக்கும்‌ 3000-கைத்தறி உரிமையாளர்கள்‌ பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்‌. சுமார்‌ 200-கோடி ரூபாய்க்கான மூலப்பொருட்கள்‌ முடங்கிக்‌ கிடக்கின்றன.

ஜனவரி 9-ஆம்‌ தேதியிலிருந்து இன்று வரை தொடர்ந்து நடைபெறும்‌ வேலை நிறுத்தத்திற்குக் காரணம்‌ ஆளும்கட்சியின்‌ மெத்தன போக்கு, ஆளும்‌ கட்சியும்‌, அதன்‌ அமைச்சரும்‌, விசைத்தறி தொழிலாளர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்க, எந்த உத்தரவாதமும்‌ கொடுக்கவில்லை. வாடிக்‌ கிடக்கும்‌ தொழிலாளர்களின்‌ வாட்டம்‌ போக்க வழிவகை செய்யாமல்‌, தற்போது திமுக ஆதரவு தொழிற்சங்கங்களை மட்டும்‌ வைத்து, ஒரு சில தறிகளை மட்டும்‌ இயக்க பார்க்கிறார்கள்‌. இது ஆளும்‌ கட்சிக்கு அழகா? ஆளும்கட்சியின்‌ தொழிலாளர்‌ விரோத போக்கை, கூட்டணியில்‌ உள்ள கம்யூனிஸ்டுகளும்‌ கூட கண்டுகொள்ளவில்லை.

கோவை, திருப்பூர்‌ மாவட்ட ஆட்சியர்கள்‌ நடத்திய பேச்சு வார்த்தையில்‌ எந்த முன்னேற்றமும்‌ இல்லை. கூலிக்கு வேலை செய்யும்‌ விசைத்தறி தொழிலாளர்களின்‌ ஊதிய உயர்வு கோரிக்கையை ஒப்பந்தம்‌ நிறைவேற்றப்படாமல்‌ இந்த பிரச்சனை தீரப்போவதில்லை. நாளை கஞ்சித்‌ தொட்டி திறந்து தொழிலாளர்கள்‌ போராடப்‌ போவதாக அறிவித்திருக்கிறார்கள்‌.

தமிழக அரசு இனியும்‌ காலம்‌ கடத்தாமல்‌, தன்‌ மெத்தனப்‌ போக்கை கைவிட்டு, பாதிக்கப்பட்டிருக்கும்‌ விவசாயத் தொழிலாளர்களை அழைத்துப்‌ பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக மூடிக்கிடக்கும்‌ விசைத்தறிகளை ஓடச்‌ செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என்று பாதிக்கப்பட்டிருக்கும்‌ தொழிலாளர்கள்‌ சார்பில்‌, மாநில அரசை வலியுறுத்துகிறேன்‌.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...