கோவையில் பதுக்கி வைத்த 1050-கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கணுவாய்‌ மற்றும்‌ இதனை சுற்றியுள்ள மக்களிடமிருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு பெற்று வடமாநிலத்தவருக்கு விற்பனை செய்ய பதுக்கி வைத்து இருந்த 1050-கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவையில் கணுவாய்‌ மற்றும்‌ இதனை சுற்றியுள்ள வடமாநிலத்தவருக்கு விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த 1050-கிலோ ரேஷன் அரிசியை போலீசார் கைப்பற்றினர்.

கோயம்புத்தூர்‌ குடிமைப்பொருள்‌ வழங்கல்‌ குற்றப்‌ புலனாய்வுத்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில்‌ கிடைத்த ரகசியத் தகவலின்படி தடாகம்‌ ரோடு கணுவாய்‌ அருகில்‌ காவல்‌ ஆய்வாளர்‌ மேனகா தலைமையில்‌, போலீசார்‌ ரோந்து நடவடிக்கையில்‌ ஈடுபட்டிருந்தனர்.

அப்போது 26.02.2022-ம்‌ தேதி மாலை சுமார்‌ 06.00-மணியளவில்‌ மதன்குமார்‌ என்பவர்‌ பொது விநியோகத்திட்ட ரேசன்‌ அரிசியைக் கணுவாய்‌ மற்றும்‌ இதனை சுற்றியுள்ள மக்களிடமிருந்து குறைந்த விலைக்குப் பெற்று வடமாநிலத்திலிருந்து வந்து வேலை பார்க்கும்‌ நபர்களுக்கு அதிக விலைக்கு விற்பதற்காகப் பதுக்கி வைத்திருந்த சுமார்‌ 1050-கிலோ பொது விநியோகத்திட்ட ரேசன்‌ அரிசியை புட்செல்‌ போலீசார்‌ கைப்பற்றிப் பதுக்கலில்‌ ஈடுபட்ட நபரான மதன்குமார்‌ என்பவரைத் தேடி வருகிறார்கள்‌.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...