கணுவாய் மற்றும் இதனை சுற்றியுள்ள மக்களிடமிருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு பெற்று வடமாநிலத்தவருக்கு விற்பனை செய்ய பதுக்கி வைத்து இருந்த 1050-கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவையில் கணுவாய் மற்றும் இதனை சுற்றியுள்ள வடமாநிலத்தவருக்கு விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த 1050-கிலோ ரேஷன் அரிசியை போலீசார் கைப்பற்றினர்.
கோயம்புத்தூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கிடைத்த ரகசியத் தகவலின்படி தடாகம் ரோடு கணுவாய் அருகில் காவல் ஆய்வாளர் மேனகா தலைமையில், போலீசார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது 26.02.2022-ம் தேதி மாலை சுமார் 06.00-மணியளவில் மதன்குமார் என்பவர் பொது விநியோகத்திட்ட ரேசன் அரிசியைக் கணுவாய் மற்றும் இதனை சுற்றியுள்ள மக்களிடமிருந்து குறைந்த விலைக்குப் பெற்று வடமாநிலத்திலிருந்து வந்து வேலை பார்க்கும் நபர்களுக்கு அதிக விலைக்கு விற்பதற்காகப் பதுக்கி வைத்திருந்த சுமார் 1050-கிலோ பொது விநியோகத்திட்ட ரேசன் அரிசியை புட்செல் போலீசார் கைப்பற்றிப் பதுக்கலில் ஈடுபட்ட நபரான மதன்குமார் என்பவரைத் தேடி வருகிறார்கள்.
கோயம்புத்தூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கிடைத்த ரகசியத் தகவலின்படி தடாகம் ரோடு கணுவாய் அருகில் காவல் ஆய்வாளர் மேனகா தலைமையில், போலீசார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது 26.02.2022-ம் தேதி மாலை சுமார் 06.00-மணியளவில் மதன்குமார் என்பவர் பொது விநியோகத்திட்ட ரேசன் அரிசியைக் கணுவாய் மற்றும் இதனை சுற்றியுள்ள மக்களிடமிருந்து குறைந்த விலைக்குப் பெற்று வடமாநிலத்திலிருந்து வந்து வேலை பார்க்கும் நபர்களுக்கு அதிக விலைக்கு விற்பதற்காகப் பதுக்கி வைத்திருந்த சுமார் 1050-கிலோ பொது விநியோகத்திட்ட ரேசன் அரிசியை புட்செல் போலீசார் கைப்பற்றிப் பதுக்கலில் ஈடுபட்ட நபரான மதன்குமார் என்பவரைத் தேடி வருகிறார்கள்.