கோவை ஈச்சனரி அருகே கோழி லோடு ஏற்றி சென்ற வேன், இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த விஜய் (26) என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி, கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
கோவை: கோவை ஈச்சனரி அருகே கோழி லோடு ஏற்றி சென்ற வேன், இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த விஜய் (26) என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி, கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம் எல்லப்பாளையம் அருந்ததியர் வீதியை சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் விஜய் 26. இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில், தர நிர்ணய பொறியாளராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று பணி நிமிர்த்தமாக, கோவை கிணத்துக்கடவு வந்த அவர், பணி முடிந்து இன்று அதிகாலை தனது இருசக்கர வாகனத்தில் நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, ஈச்சனாரி பைபாஸ் அருகே வந்த போது, கேரளாவிற்கு கோழி லோடு ஏற்றி கொண்டு அதிவேகமாக சென்ற ஈச்சர் வேன், விஜய் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில், தூக்கி வீசப்பட்டு பலத்த காயத்துடன் கிடந்த, அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் எல்லப்பாளையம் அருந்ததியர் வீதியை சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் விஜய் 26. இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில், தர நிர்ணய பொறியாளராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று பணி நிமிர்த்தமாக, கோவை கிணத்துக்கடவு வந்த அவர், பணி முடிந்து இன்று அதிகாலை தனது இருசக்கர வாகனத்தில் நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, ஈச்சனாரி பைபாஸ் அருகே வந்த போது, கேரளாவிற்கு கோழி லோடு ஏற்றி கொண்டு அதிவேகமாக சென்ற ஈச்சர் வேன், விஜய் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில், தூக்கி வீசப்பட்டு பலத்த காயத்துடன் கிடந்த, அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.