காரை சோதனை செய்தபோது அதில், மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் காரில் இருந்த 50-கிலோ எடை கொண்ட 22-மூட்டைகளில் கேரளாவுக்கு கடத்த முயன்ற சுமார் 1100-கிலோ ரேஷன் அரிசி மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையிலிருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 1,100-கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து, அண்டை மாநிலமான கேரளாவுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதாகப் புகார் எழுந்தது.
இதையடுத்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் ஆனைமலை அருகே உள்ள காந்தி ஆசிரமம் பகுதியில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் கோபிநாத் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்திய போது, வாகனத்தை நிறுத்திவிட்டு அதிலிருந்தவர்கள் தப்பியோடினர்.
இதையடுத்து, காரை சோதனை செய்தபோது அதில், மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீசார் காரில் இருந்த 50-கிலோ எடை கொண்ட 22-மூட்டைகளில் கேரளாவுக்கு கடத்த முயன்ற சுமார் 1100-கிலோ ரேஷன் அரிசி மற்றும் காரை பறிமுதல் செய்து, தப்பியோடிய நபர்களை தேடி வருகிறார்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து, அண்டை மாநிலமான கேரளாவுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதாகப் புகார் எழுந்தது.
இதையடுத்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் ஆனைமலை அருகே உள்ள காந்தி ஆசிரமம் பகுதியில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் கோபிநாத் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்திய போது, வாகனத்தை நிறுத்திவிட்டு அதிலிருந்தவர்கள் தப்பியோடினர்.
இதையடுத்து, காரை சோதனை செய்தபோது அதில், மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசார் காரில் இருந்த 50-கிலோ எடை கொண்ட 22-மூட்டைகளில் கேரளாவுக்கு கடத்த முயன்ற சுமார் 1100-கிலோ ரேஷன் அரிசி மற்றும் காரை பறிமுதல் செய்து, தப்பியோடிய நபர்களை தேடி வருகிறார்.