கோவை மாவட்டத்தில் சுகாதார துறை வெளியிட்டுள்ள தகவலின் படி, போலியோ சொட்டு மருந்து பெற மாவட்டத்தில், தகுதியான குழந்தைகள் 3, 37, 390 உள்ளனர் என்றும் அதற்காக 1,569 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவை: 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
அதன்படி, இன்று கோவை மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் துவக்கி வைத்தார்.
கோவை மாவட்டத்தில் சுகாதார துறை வெளியிட்டுள்ள தகவலின் படி, போலியோ சொட்டு மருந்து பெற மாவட்டத்தில், தகுதியான குழந்தைகள் 3, 37, 390 உள்ளனர் என்றும் அதற்காக 1,569 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனை, அரசு பள்ளிகள், அங்கன்வாடிகள் என 1,303 மையங்களிலும், விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் போன்ற பயணவழி மையங்களில் 29 இடங்களில் போலியோ சொட்டு மருந்து இன்று வழங்கப்படுகிறது.
அதேபோல, 22 நடமாடும் மையங்கள் மூலம் தொலைதூரத்தில் வாழும் பழங்குடி மற்றும் மலைவாழ் மக்கள், செங்கல் சூளை, கட்டிட வேலை செய்யும் இடங்களில் இருக்கும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தவிர, 215 தனியார் மருத்துவமனைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சொட்டு மருந்து வழங்குவதற்காக சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் என 6,536 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துவக்கப்பட்ட முகாமில் ஆட்சியர் ஏற்பாடுகளை குறித்து ஆய்வு செய்தார். அப்போது, டீன் நிர்மலா மற்றும் மருத்துவமனை மருத்துவர்கள் உடனிருந்தனர்.