சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்ற 5-பேரையும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
கோவை: பொள்ளாச்சி அருகே வனப்பகுதியில் சந்தன மரங்களை வெட்டி கடத்த முயன்ற 5-பேர் கைது செய்யப்பட்டு, ரூ. 1-லட்சம் மதிப்பிலான 73-கிலோ சந்தனக் கட்டைகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உலாந்தி வனச்சரகம், டாப்சிலிப் வனப்பகுதி மஞ்சள் போர்ட் பள்ளம் என்கிற காப்புக் காடு பகுதியிலிருந்த, 2-சந்தன மரங்களை வெட்டி சிலர், தலைச்சுமையாக சர்க்கார்பதி அருகேயுள்ள காண்டூர் கால்வாய் கொண்டு வந்து கடத்த முயற்சி நடப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் உலாந்தி வனச்சரகர் காசிலிங்கம் தலைமையில், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு மறைந்து இருந்து கண்காணித்து வந்தனர். அப்போது அங்கு வந்த மாருதி கார் ஒன்றில், வனப்பகுதியிலிருந்து வந்த 3-நபர்கள் கொண்டு வந்த சந்தன மரக்கட்டைகளை ஏற்றினர்.

இதைக்கண்ட, வனத்துறையினர் மாருதி காரை சுற்றி வளைத்து, கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட, வெங்கடேஷ்(40), முஹம்மது பஷீர்(47), மணிகண்டன்(33), சக்கரவர்த்தி(26) மற்றும் அன்பழகன்(21) ஆகிய 5-பேரை கைது செய்தனர்.
மேலும், அவர்கள் வனப்பகுதியிலிருந்து வெட்டி கடத்திக்கொண்டு வந்த சுமார் ரூ.1-லட்சம் மதிப்பிலான 73-கிலோ எடை கொண்ட 39-சந்தன கட்டைகள் மற்றும் மாருதி காரை பறிமுதல் செய்தனர். சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து சந்தன மரத்தை வெட்டி கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட 5-பேரையும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஒன்றில், ஆஜர்படுத்தினர்.
மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியான, கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறையை சேர்ந்த அப்துல் சலீம் என்பவரைக் கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உலாந்தி வனச்சரகம், டாப்சிலிப் வனப்பகுதி மஞ்சள் போர்ட் பள்ளம் என்கிற காப்புக் காடு பகுதியிலிருந்த, 2-சந்தன மரங்களை வெட்டி சிலர், தலைச்சுமையாக சர்க்கார்பதி அருகேயுள்ள காண்டூர் கால்வாய் கொண்டு வந்து கடத்த முயற்சி நடப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் உலாந்தி வனச்சரகர் காசிலிங்கம் தலைமையில், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு மறைந்து இருந்து கண்காணித்து வந்தனர். அப்போது அங்கு வந்த மாருதி கார் ஒன்றில், வனப்பகுதியிலிருந்து வந்த 3-நபர்கள் கொண்டு வந்த சந்தன மரக்கட்டைகளை ஏற்றினர்.
இதைக்கண்ட, வனத்துறையினர் மாருதி காரை சுற்றி வளைத்து, கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட, வெங்கடேஷ்(40), முஹம்மது பஷீர்(47), மணிகண்டன்(33), சக்கரவர்த்தி(26) மற்றும் அன்பழகன்(21) ஆகிய 5-பேரை கைது செய்தனர்.
மேலும், அவர்கள் வனப்பகுதியிலிருந்து வெட்டி கடத்திக்கொண்டு வந்த சுமார் ரூ.1-லட்சம் மதிப்பிலான 73-கிலோ எடை கொண்ட 39-சந்தன கட்டைகள் மற்றும் மாருதி காரை பறிமுதல் செய்தனர். சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து சந்தன மரத்தை வெட்டி கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட 5-பேரையும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஒன்றில், ஆஜர்படுத்தினர்.
மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியான, கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறையை சேர்ந்த அப்துல் சலீம் என்பவரைக் கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.