இந்த கூட்டத்தில் மணி ஆர்டர், பதிவு தபால், விரைவு அஞ்சல், சேமிப்பு கணக்கு, காப்பீடு போன்ற அஞ்சல் துறை தொடர்பான புகார்களை நுகர்வோர் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
கோவை: தமிழக அஞ்சல் வட்ட அளவிலான அஞ்சல் நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் மார்ச் 10ம் தேதி காலை 11 மணிக்கு நடக்கிறது.
சென்னை, அண்ணா சாலையில் உள்ள தமிழக அஞ்சல் வட்ட தலைமை அஞ்சல்துறை தலைவர் அலுவலக வளாகத்தில் கூட்டம் நடைபெறுகிறது.
மணி ஆர்டர், பதிவு தபால், விரைவு அஞ்சல், பார்சல், சேமிப்பு கணக்கு, காப்பீடு போன்ற அஞ்சல் துறை தொடர்பான புகார்களை, நுகர்வோர் நிவர்த்தி செய்து கொள்ளலாம். அஞ்சல் துறை சேவைகளை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனையும் வழங்கலாம்.
புகார்களை, 'விஜயலட்சுமி, உதவி இயக்குநர், தலைமை அஞ்சல் துறைத் தலைவர், தமிழ்நாடு அஞ்சல் வட்டம், சென்னை - 600002' என்ற முகவரிக்கு, வரும் மார்ச் 4ம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.
அல்லது, [email protected] என்ற இ - மெயில் மூலமும் மனுக்களை அனுப்பலாம்.
புகார்களில், அஞ்சலின் எண், அஞ்சல் அனுப்பப்பட்ட தேதி, அனுப்பியவர், பெற்றவரின் முகவரி ஆகிய விவரங்களை குறிப்பிட வேண்டும்.
மேலும், சேமிப்பு திட்டம், அஞ்சல் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு தொடர்பாக புகார் இருப்பின் அதற்கான கணக்கு எண் போன்ற விபரங்களுடன், தகுந்த ஆவணங்களை இணைத்து அனுப்ப வேண்டும் என அஞ்சல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை, அண்ணா சாலையில் உள்ள தமிழக அஞ்சல் வட்ட தலைமை அஞ்சல்துறை தலைவர் அலுவலக வளாகத்தில் கூட்டம் நடைபெறுகிறது.
மணி ஆர்டர், பதிவு தபால், விரைவு அஞ்சல், பார்சல், சேமிப்பு கணக்கு, காப்பீடு போன்ற அஞ்சல் துறை தொடர்பான புகார்களை, நுகர்வோர் நிவர்த்தி செய்து கொள்ளலாம். அஞ்சல் துறை சேவைகளை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனையும் வழங்கலாம்.
புகார்களை, 'விஜயலட்சுமி, உதவி இயக்குநர், தலைமை அஞ்சல் துறைத் தலைவர், தமிழ்நாடு அஞ்சல் வட்டம், சென்னை - 600002' என்ற முகவரிக்கு, வரும் மார்ச் 4ம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.
அல்லது, [email protected] என்ற இ - மெயில் மூலமும் மனுக்களை அனுப்பலாம்.
புகார்களில், அஞ்சலின் எண், அஞ்சல் அனுப்பப்பட்ட தேதி, அனுப்பியவர், பெற்றவரின் முகவரி ஆகிய விவரங்களை குறிப்பிட வேண்டும்.
மேலும், சேமிப்பு திட்டம், அஞ்சல் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு தொடர்பாக புகார் இருப்பின் அதற்கான கணக்கு எண் போன்ற விபரங்களுடன், தகுந்த ஆவணங்களை இணைத்து அனுப்ப வேண்டும் என அஞ்சல்துறை தெரிவித்துள்ளது.