சேரன்மாநகர் சிறுவர் விளையாட்டுப் பூங்கா பராமரிப்பில் அலட்சியம்: தனியாருக்கு பதில் மாநகராட்சி நிர்வாகமே பராமரிக்க மக்கள் கோரிக்கை

மாநகராட்சி சார்பில் தனியார் நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தம் 3-மாதங்களில் முடிகிறது. அடுத்த முறை மாநகராட்சி நிர்வாகமே பராமரிக்கும் பணியை எடுத்து நடத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: சேரன்மாநகர் சிறுவர் விளையாட்டுப் பூங்கா பராமரிப்பில் அலட்சியம் காட்டும் தனியார் நிறுவனத்துக்கு பதில் மாநகராட்சி நிர்வாகமே பராமரிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளாங்குறிச்சி ரோட்டில் அமைந்துள்ளது சேரன்மாநகர் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குடியிருப்பு பகுதி. ஏ பி சி என மூன்று பிரிவுகளின் கீழ் 568 வீடுகள் உள்ளன.



கடைசி பஸ் ஸ்டாப் அருகே மாநகராட்சி சார்பில் ரிசர்வ் சைட் இடத்தில் பிரம்மாண்டமான முறையில் சிறுவர் விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.



கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த பூங்கா சமீபகாலமாக போதிய பராமரிப்பு இல்லாமல் காணப்படுவதாகவும், பூங்கா மற்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ள உபகரணங்கள் முற்றிலும் சேதம் அடைவதற்கு முன்பு மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சேரன்மாநகர் பகுதி மக்கள் கூறியதாவது:-

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் சேரன்மாநகர் கடைசி பஸ் ஸ்டாப் அருகே சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. பூங்கா பராமரிப்பு பணி தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. மாதம்தோறும் பூங்கா பராமரிப்பு பணியில் ஈடுபட்டுவரும் ஊழியர்கள் இருவருக்கு 7,000 ரூபாய் வீதம் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

பராமரிக்கும் ஒப்பந்தம் எடுத்துள்ள தனியார் நிறுவனத்திற்கு மாதம்தோறும் 65,000 ரூபாய் மாநகராட்சி சார்பில் வழங்கப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் இரண்டு பக்கெட், இரண்டு மக் மட்டுமே ஒப்பந்ததாரர் சார்பில் வழங்கப்பட்டுள்ளது என்றும் பூங்கா பராமரிப்புக்குத் தேவைப்படும் அடிப்படை உபகரணங்களான அரிவாள், கடப்பாரை, செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச ஓஸ் பைப் கழிப்பிடத்தைச் சுத்தம் செய்வதற்குத் தேவைப்படும் பினாயில் ஆசிட் உள்ளிட்ட எந்த பொருட்களும் ஒப்பந்தம் எடுத்து உள்ள தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்படுவதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



பூங்கா வளாகத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள விலங்குகளின் சிலைகள் சேதம் அடையத் துவங்கியுள்ளன தவிர செயற்கையாக அமைக்கப்பட்டுள்ள நீர்வீழ்ச்சி காட்சிப் பொருளாக மட்டும் உள்ளது.



மேலும் பூங்கா வளாகத்துக்குள் பல்வேறு இடங்களில் நடை பாதையில் அமைக்கப்பட்டுள்ள டைல்ஸ் பெயர்ந்து சிதிலமடைந்து வருகிறது.

மாநகராட்சி சார்பில் தனியார் நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தம் 3-மாதங்களில் முடிகிறது. அடுத்த முறை மாநகராட்சி நிர்வாகமே பராமரிக்கும் பணியை எடுத்து நடத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பல லட்சம் ரூபாய் செலவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா எதிர்வரும் நாட்களில் தொடர்ந்து மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் இருப்பதை மாநகராட்சி நிர்வாகம் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் அதற்குக் கோவை மாநகராட்சி 22-வது வார்டு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாபு அவர்கள் மாமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...