மத்திய பிராவிடண்ட்‌ பண்ட்‌ ஆணையாளருக்கு கொடிசியா கோரிக்கை

சிறு-குறு மற்றும்‌ நடுத்தர தொழிற்சாலைகளின்‌ தொழிலாளர்‌ வைப்பு நிதி தொடர்பாக மத்திய தொழிலாளர்‌ வைப்பு நிதி ஆணையாளருக்கு கொடிசியா கோரிக்கை வைத்துள்ளது.


கோவை: மத்திய தொழிலாளர்‌ வைப்பு நிதி ஆணையாளருக்கு சிறு-குறு மற்றும்‌ நடுத்தர தொழிற்சாலைகளின் தொழிலாளர்‌ வைப்பு நிதி தொடர்பாக கொடிசியா கோரிக்கை வைத்துள்ளது.

சிறு-குறு மற்றும்‌ நடுத்தர தொழிற்சாலைகளின்‌ தொழிலாளர்‌ வைப்பு நிதி தொடர்பாக மத்திய தொழிலாளர்‌ வைப்பு நிதி' ஆணையாளருக்கு கொடிசியா கீழ்க்கண்ட கோரிக்கைகளை அளித்துள்ளது.

1.இபிஎப்‌ சட்டம்‌ 1952-பிரிவு 6-ன்படி, சிறு குறு மற்றும்‌ நடுத்தர தொழிற்சாலைகளின்‌ இயல்பு மற்றும்‌ நிதி நிலையைக்‌ கருத்தில்‌ கொண்டு தொழிலாளர்‌ மற்றும்‌ நிறுவன உரிமையாளர்‌ பங்களிப்பை 10% என்று வரையறுக்க வேண்டும்‌. இது 20 தொழிலாளர்களுக்குக் குறைவாக உள்ள தொழிற்சாலைகளுக்கும்‌ பொருந்தும்படி வகை செய்ய வேண்டும்‌.

2.இபிஎப்‌ சட்டம்‌ 1952 பிரிவு 7Q-ன்படி தற்போது 12% வட்டி விதிக்கப்படுகிறது. ஆனால்‌ வங்கிகள்‌ போன்றவை தற்போது 8.5 முதல்‌ 8.75% வரை வட்டி விகிதத்தைக் குறைத்திருப்பதைக் கவனத்தில்‌ கொண்டு, நமது சட்டத்திலும்‌ தகுந்த திருத்தம்‌ கொண்டுவர வேண்டும்‌.

3.கோவிட்‌ தொற்று காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாக (2020 - 2021, 2020 - 2022) பல சிறு குறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ நிறுவனங்கள்‌ கடமையான நிதி சிக்கல்‌ மற்றும்‌ உற்பத்தி குறைவு காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்‌ பிஎப்‌ தொகைக்குச் செலுத்த வேண்டிய பங்களிப்பு தாமதமாகும்‌ போது விதிக்கப்படும்‌ தண்டத்‌ தீர்வை குறைக்கப்பட வேண்டும்‌.

4.தவிர்க்க இயலாத சூழலில்‌ ஒரு சிறு குறு தொழில்‌ நிறுவனம்‌ இயங்காமல்‌ மூடப்படும்‌ போது, அதற்குத் தேவையான சான்றிதழ்களைச் சமர்ப்பிக்கும்போது, அந்த நிறுவனத்திற்கான "Closure" மற்றும்‌ “No Due’ சான்றிதழ்கள்‌ தாமதமின்றி அறிவிக்கப்பட வேண்டும்‌.

5.இபிஎப்‌ சர்வரில்‌ ஏற்படும்‌ சிக்கலால்‌, ஆன்லைன்‌ நாமினேஷன்‌ பதிவு செய்வது இயலாமல்‌ போவதால்‌, குடும்ப பென்ஷன்‌ பெறுவது தாமதமாவதைத் தவிர்க்க நேரடியாக நாமினேஷன்‌ பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும்‌.

6.உச்ச நீதிமன்ற ஆணை SLP NO.811/2011-ன்படி, பயணப்படி என்பது தொழிலாளர்‌ சம்பளத்தின்‌ ஒரு பகுதியாகாது என்பதால்‌, அதற்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும்‌.

7.50% ஊதியத்திற்கு மேல்‌ பிஎப்‌ தொகை செலுத்தும்‌ நிறுவனங்களைக் கூடுதல்‌ பங்களிப்பு தொகை செலுத்துமாறு வலியுறுத்தாமல்‌ இருக்க அறிவுறுத்தப்பட வேண்டும்‌.

எனவே மேற்கண்ட கோரிக்கைகள்‌ குறித்துப் பரிசீலித்துச் சிறு குறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ நிறுவனங்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு கொடிசியாவின்‌ சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...