ஈஷாவில்‌ மார்ச்‌ 1-ம்‌ தேதி மஹாசிவராத்திரி விழா கொண்டாட்டம்: ருத்ராட்சத்தை வீட்டிலேயே இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்‌

கோவை ஈஷாவில்‌ மஹாசிவராத்திரி விழா வரும்‌ மார்ச்‌ 1-ம்‌ தேதி ஆதியோகி முன்பு மிகச்‌ சிறப்பாக நடைபெற உள்ளது. ஆதியோகியின்‌ அருளை பெறும்‌ விதமாகச் சத்குருவால்‌ சக்தியூட்டப்பட்ட ருத்ராட்சங்கள்‌ பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.


கோவை: கோவை ஈஷாவில்‌ மஹாசிவராத்திரி விழா வரும்‌ மார்ச்‌ 1-ம்‌ தேதி ஆதியோகி முன்பு மிகச்‌ சிறப்பாக நடைபெற உள்ளது. ஆதியோகியின்‌ அருளை பெறும்‌ விதமாகச் சத்குருவால்‌ சக்தியூட்டப்பட்ட ருத்ராட்சங்கள்‌ பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.

ருத்ராட்ச பிரசாதத்தை வீட்டிலேயே பெறுவதற்கு 83000-83000 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால்‌ கொடுக்க வேண்டும்‌. ருத்ராட்சத்துடன்‌ சேர்த்து தியானலிங்கத்தில்‌ வைத்து சக்தியூட்டப்பட்ட விபூதி, பயத்தை நீக்கி, ஒருவரின்‌ குறிக்கோளை நிறைவேற்ற உதவும்‌ அபய சூத்ரா, ஆதியோகியின்‌ புகைப்படம்‌ ஆகியவை இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்படும்‌.

ஆன்மீக சிறப்புமிக்க ருத்ராட்சத்தை ஒருவர்‌ அணிவதன்‌ மூலம்‌ உடல்‌ மற்றும்‌ மனதளவில்‌ சமநிலை பெற முடியும்‌. ஆரா தூய்மை பெறும்‌. எதிர்மறை சக்திகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்‌. மேலும்‌, தியானம்‌ செய்வதற்கும்‌ இது உதவிக்கரமாக இருக்கும்‌. ஈஷாவில்‌ வழங்கப்படும்‌ ஐந்து முக ருத்ராட்சத்தை ஆண்‌, பெண்‌ வேறுபாடு இன்றி அனைவரும்‌ அணிந்து கொள்ளலாம்‌.

மஹாசிவராத்திரியின்‌ முக்கியத்துவம்‌ குறித்து சத்குரு கூறுகையில்‌, “மஹாசிவராத்திரி தினம்‌ இயற்கை நமக்கு அளித்து இருக்கும்‌ ஒரு மகத்தான அன்பளிப்பு. இந்த ஒரு புனித ராத்திரியில்‌ நீங்கள்‌ விழிப்பாகவும்‌, விழிப்புணர்வாகவும்‌ இருந்தால்‌ மகத்தான நன்மைகளைப் பெற முழயும்‌. இந்த நன்மை தமிழ்‌ மக்கள்‌ அனைவருக்கும்‌ சேர வேண்டும்‌ என்பது என்னுடைய ஆசை, அருள்‌” என கூறியுள்ளார்‌.

இவ்விழா மார்ச்‌ 1-ம்‌ தேதி மாலை 6-மணிக்கு தொடங்கி மறுநாள்‌ காலை 6-மணி வரை நடக்கும்‌. சத்குரு முன்னிலையில்‌ நடக்கும்‌ இவ்விழா தியானலிங்கத்தில்‌ நிகழ்த்தப்படும்‌ பஞ்ச பூத ஆராகனையுடன்‌ தொடங்கும்‌.

பின்னர்‌, லிங்க பைரவி தேவியின்‌ மஹா யாத்திரை, சக்திவாய்ந்த தியானங்கள்‌, சத்குருவின்‌ சத்சங்கம்‌, கண்ணைக் கவரும்‌ ஆகியோகி திவ்ய தரிசன காட்சியும்‌ நடக்கும்‌. மேலும்‌, மக்களை இரவு முழுவதும்‌ விழிப்பாகவும்‌, விழிப்புணர்வாகவும்‌ வைத்து இருக்கப் புகழ்பெற்ற இசை கலைஞர்களின்‌ இசை மற்றும்‌ நடன நிகழ்ச்சிகளும்‌ கோலாகலமாக நடைபெற உள்ளது.

கொரோனா பரவல்‌ தடுப்பு நடவடிக்கையின்‌ காரணமாக மிக குறைவான மக்கள்‌ மட்டுமே இவ்விழாவில்‌ நேரில்‌ பங்கேற்க உள்ளனர்‌. பொதுமக்கள்‌ அனைவரும்‌ வீட்டில்‌ பாதுகாப்பாக இருந்தப்படியே நேரலையில்‌ பங்கேற்கலாம்‌.

இவ்விழா ஈஷாவின்‌ அதிகாரப்பூர்வ யூ - டியூப் சேனலான Sadhguru Tamil-ல் நோடி ஒளிப்பரப்பு செய்யப்படும்‌. மேலும்‌, தமிழ்‌, தெலுங்கு, கன்னடம்‌, மராத்தி, இந்தி என பல்வேறு மாநில மொழிகளில்‌ முன்னணி தொலைக்காட்சிகள்‌ மற்றும்‌ யூ-டியூப்‌ சேனல்களிலும்‌ நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட உள்ளது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...