தமிழக மக்களின் கோரிக்கையை மத்திய அரசு உடனே கவனிக்கும் என்பதில் பொங்கல் விடுமுறையால் தெளிவாகியுள்ளது என தமிழிசை தகவல்


பொங்கல் பண்டிகை பொது விடுமுறை தின பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், தமிழர்கள் மத்திய அரசால் உதாசீனப்படுத்தப்படுவதோ புறக்கணிக்கப்படுவதோ இல்லை என்பதும் அவர்களது கோரிக்கை உடனே கவணிக்கப்படும் என்பது தற்போது தெளிவு படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழக பாஜகவின் அழுத்தம் காரணமாகவே மத்திய அரசு பொங்கலை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது என்றும், நேற்றைய தினம் மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவிடம் இதுகுறித்து பேசி அழுத்தம் தந்ததாகவும் குறிப்பிட்டார். 

தமிழர்கள் உதாசீனப்படுத்தப்படுவதோ புறக்கணிக்கப்படுவதோ இல்லை என்பதும், அவர்களது கோரிக்கை உடனே கவணிக்கப்படும் என்பதும் தெளிவு படுத்தப்பட்டுள்ளது எனவும், மக்கள் பிரச்சனையில் பாஜக என்றுமே தமிழகத்திற்கு எதிராக இருக்காது என்றும் சுட்டிக்காட்டினார். 

மேலும், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்தால் மட்டும் போதாது எனவும், விவசாயிகளின் அடிப்படை தேவைகளை அறிந்து ஆறுகளை தூர் வாருதல், மணல் அள்ளுவதை தடுத்தல் மற்றும் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துதல் போன்றவற்றிற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

பொங்கல் விடுமுறை என்பது 15 ஆண்டு காலமாக சிறப்பு பட்டியலில் தான் இருப்பதாகவும், புதிதாக எந்த அதிகாரப்பூர்வ பட்டியலில் இருந்தும் நீக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...