கொரோனா காலத்தில் மக்கள் வறுமையை பயன்படுத்தி திமுக பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கியுள்ளதாக புகார்.
கோவை: மக்கள் வறுமையைப் பயன்படுத்தி பணம் கொடுத்து திமுக வெற்றி பெற்றுள்ளதாக பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளரும், மறைந்த முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் 74வது பிறந்த நாள் விழாவை அக்கட்சியினர் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர் .
இதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி நகர அதிமுக சார்பில் மத்திய பேருந்து நிலையம் முன்பு பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் தலைமையில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இதையடுத்து செய்தியாளருக்கு ஜெயராமன் அளித்த பேட்டியின் போது:-
இந்த உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் உண்மையான தீர்ப்பை வழங்க முடியாமல், கொரோனா காலத்தில் மக்கள் வறுமையை பயன்படுத்தி திமுக பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கி உள்ளார்கள். இதனால் அதிமுகவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இருந்தாலும் உண்மையான வெற்றி அதிமுகவுக்கு தான். மக்கள் ஜனநாயக ரீதியாக சொந்த தீர்ப்பை அளிக்க முடியாமல் அதிகாரத்தை பயன்படுத்தி மக்களை மிரட்டி, தங்களுக்கு சாதகமாக வாக்களிக்க வைத்ததால் தான் இந்த நிலை. எதிர்காலத்தில் வரவுள்ள தேர்தலில் மக்கள் அதிமுகவிற்கு ஆதரவு தருவார்கள்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கைது, திமுக ஆட்சியின் அடக்கு முறைக்கு எடுத்துக்காட்டு. திமுகவிற்கு இதுபோன்ற சம்பவங்கள் கைவந்த கலை. இதற்கு அதிமுக அஞ்சாது. இது ஜனநாயகத்தின் கொடுமை. விரைவில் இதற்கு பதில் சொல்லும் காலம் வரும் என்று தெரிவித்தார்.

அதிமுக பொதுச்செயலாளரும், மறைந்த முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் 74வது பிறந்த நாள் விழாவை அக்கட்சியினர் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர் .
இதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி நகர அதிமுக சார்பில் மத்திய பேருந்து நிலையம் முன்பு பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் தலைமையில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இதையடுத்து செய்தியாளருக்கு ஜெயராமன் அளித்த பேட்டியின் போது:-
இந்த உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் உண்மையான தீர்ப்பை வழங்க முடியாமல், கொரோனா காலத்தில் மக்கள் வறுமையை பயன்படுத்தி திமுக பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கி உள்ளார்கள். இதனால் அதிமுகவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இருந்தாலும் உண்மையான வெற்றி அதிமுகவுக்கு தான். மக்கள் ஜனநாயக ரீதியாக சொந்த தீர்ப்பை அளிக்க முடியாமல் அதிகாரத்தை பயன்படுத்தி மக்களை மிரட்டி, தங்களுக்கு சாதகமாக வாக்களிக்க வைத்ததால் தான் இந்த நிலை. எதிர்காலத்தில் வரவுள்ள தேர்தலில் மக்கள் அதிமுகவிற்கு ஆதரவு தருவார்கள்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கைது, திமுக ஆட்சியின் அடக்கு முறைக்கு எடுத்துக்காட்டு. திமுகவிற்கு இதுபோன்ற சம்பவங்கள் கைவந்த கலை. இதற்கு அதிமுக அஞ்சாது. இது ஜனநாயகத்தின் கொடுமை. விரைவில் இதற்கு பதில் சொல்லும் காலம் வரும் என்று தெரிவித்தார்.