மக்கள் வறுமையைப் பயன்படுத்தி பணம் கொடுத்து திமுக வெற்றி பெற்றுள்ளது - பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு..!

கொரோனா காலத்தில் மக்கள் வறுமையை பயன்படுத்தி திமுக பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கியுள்ளதாக புகார்.


கோவை: மக்கள் வறுமையைப் பயன்படுத்தி பணம் கொடுத்து திமுக வெற்றி பெற்றுள்ளதாக பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளரும், மறைந்த முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் 74வது பிறந்த நாள் விழாவை அக்கட்சியினர் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர் .

இதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி நகர அதிமுக சார்பில் மத்திய பேருந்து நிலையம் முன்பு பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் தலைமையில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.



இதையடுத்து செய்தியாளருக்கு ஜெயராமன் அளித்த பேட்டியின் போது:-

இந்த உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் உண்மையான தீர்ப்பை வழங்க முடியாமல், கொரோனா காலத்தில் மக்கள் வறுமையை பயன்படுத்தி திமுக பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கி உள்ளார்கள். இதனால் அதிமுகவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இருந்தாலும் உண்மையான வெற்றி அதிமுகவுக்கு தான். மக்கள் ஜனநாயக ரீதியாக சொந்த தீர்ப்பை அளிக்க முடியாமல் அதிகாரத்தை பயன்படுத்தி மக்களை மிரட்டி, தங்களுக்கு சாதகமாக வாக்களிக்க வைத்ததால் தான் இந்த நிலை. எதிர்காலத்தில் வரவுள்ள தேர்தலில் மக்கள் அதிமுகவிற்கு ஆதரவு தருவார்கள்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கைது, திமுக ஆட்சியின் அடக்கு முறைக்கு எடுத்துக்காட்டு. திமுகவிற்கு இதுபோன்ற சம்பவங்கள் கைவந்த கலை. இதற்கு அதிமுக அஞ்சாது. இது ஜனநாயகத்தின் கொடுமை. விரைவில் இதற்கு பதில் சொல்லும் காலம் வரும் என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...