சின்னவேடம்பட்டியில் உள்ள ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியைச் சேர்ந்த 7 மாணவ மாணவியர்கள் தேர்ச்சி பெற்று வரலாற்றுச் சாதனை.
கோவை: கோவை மாணவ மாணவிகள் தேசிய திறனாய்வு தேர்வான என்.டி.எஸ்.இ. தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கோவை மாணவ மாணவிகள் மத்திய அரசு நடத்தக்கூடிய ஸ்காலர்ஷிப் தேர்வான தேசிய திறனாய்வு என்டிஎஸ்சி தேர்வில் 5 மாணவர்கள், 2 மாணவிகள் வெற்றி பெற்று பட்ட மேற்படிப்பு வரை ஸ்காலர்சிப் பெற தகுதி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

நடைபெற்று முடிந்த கல்வியாண்டில் 2021 -22 ஆம் ஆண்டில் என்டிஎஸ்சி இரண்டாம் கட்ட தேசிய திறனாய்வு தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது.
இதில் அகில இந்திய அளவில் நடைபெற்ற தேசிய திறனாய்வு தேர்வில் கோவை சின்னவேடம்பட்டியில் உள்ள ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியைச் சேர்ந்த 7 மாணவ மாணவியர்கள் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

அரசின் கல்வி உதவித்தொகை 1,250 மாதம்தோறும் பெறுவதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர். பிரியதர்ஷினி, தன்யா, நரேன், ஸ்ரீநாத், அஸ்வந்த், ஆதர்ஸ், விமல் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
இத்தேர்வில் பங்கு பெற்று வரலாற்றுச் சாதனைப் படைத்த மாணவ மாணவியருக்கு பள்ளியின் துணை பொது மேலாளர் நாகேஸ்வரராவ், மண்டல மேலாளர் பாலகிருஷ்ணன், பள்ளி முதல்வர் மாலதிராஜா, சுவாதி ரெட்டி, துணை முதல்வர் பிருந்தா கல்வி பொறுப்பாளர் செல்லையா, சேகர், ரவிராஜ், சோபியா மற்றும் ஆசிரிய ஆசிரியர்களும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

கோவை மாணவ மாணவிகள் மத்திய அரசு நடத்தக்கூடிய ஸ்காலர்ஷிப் தேர்வான தேசிய திறனாய்வு என்டிஎஸ்சி தேர்வில் 5 மாணவர்கள், 2 மாணவிகள் வெற்றி பெற்று பட்ட மேற்படிப்பு வரை ஸ்காலர்சிப் பெற தகுதி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
நடைபெற்று முடிந்த கல்வியாண்டில் 2021 -22 ஆம் ஆண்டில் என்டிஎஸ்சி இரண்டாம் கட்ட தேசிய திறனாய்வு தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது.
இதில் அகில இந்திய அளவில் நடைபெற்ற தேசிய திறனாய்வு தேர்வில் கோவை சின்னவேடம்பட்டியில் உள்ள ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியைச் சேர்ந்த 7 மாணவ மாணவியர்கள் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
அரசின் கல்வி உதவித்தொகை 1,250 மாதம்தோறும் பெறுவதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர். பிரியதர்ஷினி, தன்யா, நரேன், ஸ்ரீநாத், அஸ்வந்த், ஆதர்ஸ், விமல் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
இத்தேர்வில் பங்கு பெற்று வரலாற்றுச் சாதனைப் படைத்த மாணவ மாணவியருக்கு பள்ளியின் துணை பொது மேலாளர் நாகேஸ்வரராவ், மண்டல மேலாளர் பாலகிருஷ்ணன், பள்ளி முதல்வர் மாலதிராஜா, சுவாதி ரெட்டி, துணை முதல்வர் பிருந்தா கல்வி பொறுப்பாளர் செல்லையா, சேகர், ரவிராஜ், சோபியா மற்றும் ஆசிரிய ஆசிரியர்களும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.