கோவை மாநகராட்சியில் 86-வார்டுகளில் டெபாசிட் இழந்த பாஜக வேட்பாளர்கள்

பாஜக போட்டியிட்ட மொத்தம் 97-வார்டுகளில் ஒன்றில் கூட வெற்றிபெறவில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும், 86-வார்டுகளில் டெபாசிட் கூட வாங்கவில்லை என்பது அக்கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை மாநகராட்சி தேர்தலில் முக்கிய கட்சி வேட்பாளர்கள் நிறைய பேர் டெபாசிட் இழந்தனர்.

கோவையில் கடந்த 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 22-ஆம் தேதி நேற்று வாக்குகள் எண்ணப்பட்டது. அதில், கோவை உட்பட தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.

குறிப்பாக, கோவை மாநகராட்சியில் 96-இடங்களை திமுக கூட்டணி வெற்றி பெற்று, மாநகராட்சியைக் கைப்பற்றியுள்ளது. மொத்தம் 100-வார்டுகளில், 3-வார்டுகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றுள்ளது. மீதம் ஒரு வார்டு எஸ்.டி.பி.ஐ கட்சி வசம் சென்றது.

இந்த நிலையில், பாஜக போட்டியிட்ட மொத்தம் 97-வார்டுகளில் ஒன்றில் கூட வெற்றிபெறவில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும், 86 வார்டுகளில் டெபாசிட் கூட வாங்கவில்லை என்பது அரசியல் கட்சியினர் மற்றும் மக்களிடையே பேசு பொருளாக மாறியுள்ளது.

மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்த பாஜகவினர் படு தோல்வி அடைந்தது அக்கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, 97-வார்டுகளில் போட்டியிட்டு 86-வார்டுகளில் டெபாசிட் கூட வாங்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வார்டு 5, 6, 8, 9, 20, 22, 25, 26, 27, 55, 56, 57, 58, 61 என 86-வார்டுகளில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.

அதே போல், 100 வார்டுகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்கள் 14-வார்டில் அவர்களை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்களிடம் டெபாசிட் இழந்தனர். கோவை மாநகராட்சியில் வார்டு 2, 8, 10, 11, 16, 17, 22, 25, 46, 54, 55, 57, 59, 84, 86 வது வார்டுகளில் அதிமுக வேட்பாளர் டெபாசிட்டை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய கைதி, சேலத்தில் கைது..!

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் இருந்து தப்பிய ஆந்திராவைச் சேர்ந்த மோசடி வழக்குக் கைதி பிம்முடு அஜித்குமார்,...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...