தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ள நிலையில், வெள்ளலூர் பேரூராட்சியை அதிமுக கைப்பற்றியுள்ளது.
கோவை: கோவை வெள்ளலூர் பேரூராட்சியில் 8 இடங்களில் வெற்றி பெற்று பேரூராட்சியை அதிமுக கைப்பற்றியது.
கோவையில் கடந்த 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில் நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனிடையே, வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற்று நகராட்சி மற்றும் மாநகராட்சி பேரூராட்சிகளை கைப்பற்றி உள்ளது.
இந்த நிலையில், கோவையில் உள்ள வெள்ளலூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் இன்று வாக்கு எண்ணிக்கை முடிவில் 8 பேர் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
தமிழகம் முழுவதிலும் கோவை மாவட்டத்திலும் திமுக முன்னிலை பெற்றுக் கொண்டிருந்த நிலையில், வெள்ளலூர் பேரூராட்சியை அதிமுக 8 உறுப்பினருடன் கைப்பற்றி இருப்பது மக்களிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் கடந்த 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில் நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனிடையே, வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற்று நகராட்சி மற்றும் மாநகராட்சி பேரூராட்சிகளை கைப்பற்றி உள்ளது.
இந்த நிலையில், கோவையில் உள்ள வெள்ளலூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் இன்று வாக்கு எண்ணிக்கை முடிவில் 8 பேர் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
தமிழகம் முழுவதிலும் கோவை மாவட்டத்திலும் திமுக முன்னிலை பெற்றுக் கொண்டிருந்த நிலையில், வெள்ளலூர் பேரூராட்சியை அதிமுக 8 உறுப்பினருடன் கைப்பற்றி இருப்பது மக்களிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.